28 12
இலங்கைசெய்திகள்

புதிய அரசாங்கத்தின் குற்றச்சாட்டுக்களை மறுக்கும் சமன் ஏக்கநாயக்க

Share

புதிய அரசாங்கத்தின் குற்றச்சாட்டுக்களை மறுக்கும் சமன் ஏக்கநாயக்க

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கத்தின் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் வாகனங்கள் எவ்வித துஸ்பிரயோகத்திற்கும் உட்படுத்தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அனைத்து வாகனங்களுக்கும் ஆவணங்கள் உண்டு எனவும், இந்த வாகனங்களை யார் பயன்படுத்தினார்? என்ன தேவைக்காக பயன்படுத்தினார் என்பது குறித்த ஆவணங்கள் உண்டு எனவும் அதனை பார்த்தால் உண்மையை தெரிந்து கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் அதிகாரிகள் சட்ட ரீதியாகவும் சரியான நடவடிக்கையாகவும் இந்த வாகனங்களை ஒப்படைத்துள்ளனர் என சமன் ஏக்கநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் வாகனங்களை தரித்து நிறுத்த இடவசதி போதவில்லை என்பதனால் அரசாங்கத்திற்கு சொந்தமான வேறும் இடங்களில் வாகனங்கள் நிறுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

எந்தவொரு வாகனமும் காணாமல் போகவில்லை எனவும் தற்போதைய ஜனாதிபதி பதவிப் பிரமாணம் செய்து கொண்ட போது அந்த நிகழ்வில் பங்கு பற்றியதாகவும் அப்போது தமது அதிகாரபூர்வ வாகனத்தை ஒப்படைத்து விட்டதாகவும் அவர் குறிப்பிடடுள்ளார்.

Share
தொடர்புடையது
ahr0chm6ly9jyxnzzxr0zs5zcghkawdp 4
உலகம்செய்திகள்

துப்பாக்கியைப் பிடுங்கிய ‘ஹீரோ’ அஹமது அல் அஹமதுவைச் சந்தித்த பிரதமர் அல்பானீஸ்; துப்பாக்கிக் கட்டுப்பாடு மேலும் அதிகரிப்பு!

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் (Bondi Beach) யூதர்கள் நிகழ்வில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டின்போது, துணிச்சலுடன்...

coverimage 01 1512114047 1546165239 1562741874
இலங்கைசெய்திகள்

இலங்கையில் எயிட்ஸ் தொற்று 6% அதிகரிப்பு:உயிரிழப்புகள் 30 ஆகப் பதிவு!

இலங்கையில் எயிட்ஸ் தொற்று அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 2025ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில்...

images 5 5
உலகம்செய்திகள்

இந்தியா-ரஷ்யா இராணுவ ஒப்பந்தம்: ‘தளவாட ஆதரவு பரஸ்பரப் பரிமாற்ற’ சட்டத்துக்குப் புட்டின் ஒப்புதல்!

இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான ‘Reciprocal Exchange of Logistics Support’ (தளவாட ஆதரவின் பரஸ்பரப்...

articles2FvNVHzqk0rGKKgejyoUzJ
இலங்கைசெய்திகள்

கல்வி ஒத்துழைப்பு வலுப்படுத்தல்: வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய அமைச்சரவை அனுமதி!

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராகப் பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த...