10 21
இலங்கைசெய்திகள்

எதிர்க்கட்சிகள் நிறுவும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு நிதி ஒதுக்கீடு இல்லை : பிமல் பகிரங்கம்

Share

சூழ்ச்சித் திட்டங்கள் மூலம் எதிர்க்கட்சிகளினால் நிறுவப்படும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்யாது என அமைச்சர் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கான சம்பளக் கொடுப்பனவுகள் தவிர்ந்த ஏனையவற்றுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படாது என தெரிவித்துள்ளார்.

வேறு விடயங்களுக்காக நிதி ஒதுக்கீடு செய்ய அரசாங்கம் தயாரில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊழல் மோசடிகளை மேற்கொள்வோரினால் ஆட்சி செய்யப்படும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய அரசாங்கத்திற்கு எவ்வித அவசியம் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

சிறு சிறு குழுக்கள் ஒன்றிணைந்து ஆட்சியை நிறுவுவதற்கு மக்கள் ஆணையளிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவ்வாறு சிறு சிறு குழுக்கள் ஒன்றிணைந்து ஆட்சியை அமைப்பது ஜனநாயக விரோதமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு மாநகரசபையின் மேயராக ட்ரோய் பல்தாசர் நியமிக்கப்படுவார் என்பதை எழுதி வைத்துக் கொள்ளுமாறு அமைச்சர் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
14 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2026 ஜனவரியில் இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 6.8 பில்லியன் டொலராக உயர்வு!

2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான இலங்கையின் பொருளாதார நிலவரம் குறித்த அறிக்கையை இலங்கை மத்திய...

12 3
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையின் புதிய அரசியலமைப்பு முயற்சி: 30 ஆண்டுகளுக்கும் மேலாக முடிவின்றித் தொடரும் பயணம்!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சி, பல...

11 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மகளின் நினைவாக இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 4.5 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய தந்தை!

இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மற்றும் காணியற்ற ஏழைக் குடும்பங்களுக்காக, தனது 16 வயது மகளின் நினைவாக...

10 4
உலகம்செய்திகள்

ஈரான் மீதான கூட்டுத் தாக்குதல்: பதற்றத்தைக் குறைக்க இந்தியா வலியுறுத்தல்!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரானில் உள்ள ராணுவத் தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ள...