rtjy 44 scaled
இலங்கைசெய்திகள்

சனல் – 4 ஊடகத்திற்கு தேவையானவாறு நாம் ஆடத் தேவையில்லை

Share

சனல் – 4 ஊடகத்திற்கு தேவையானவாறு நாம் ஆடத் தேவையில்லை

சனல் – 4 ஊடகத்திற்கு தேவையானவாறு நாம் ஆட வேண்டியதில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பு கோட்டை சம்புத்தாலோக்க விகாரைக்கு இன்று(04.10.2023) சென்றிருந்த மகிந்த ராஜபக்சவிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்குலக ஊடகங்களுக்கு கடுந்தொனியில் பேசியதனை வரவேற்பதாகத் சுட்டிக்காட்டியுள்ளார்.

தாம் என்றைக்குமே மக்களின் பக்கம் இருப்பதாகவும் மக்கள் துன்பத்தில் வாழ்வதின் காரணத்தினால் அவர்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டுமென கோருவதாகவும் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

” தற்போதைய ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்க முடியும். எனினும் அதனை பலவந்தமாக செய்ய முடியாது.

மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவது குறித்து ஜனாதிபதி ஆலோசனை கோரினால் அதனை வழங்கத் நான் தயார்.

தாம் ஆட்சி செய்தது போதும். தற்பொழுது புதிய தலைமைத்துவம் உருவாக வேண்டும். எனக்கு மீண்டும் ஆட்சிக்கு வரும் உத்தேசமில்லை” என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...