19 16
இலங்கைசெய்திகள்

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை : சஜித் தரப்பின் அறிவிப்பு

Share

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை : சஜித் தரப்பின் அறிவிப்பு

அசோக ரன்வல (Asoka Ranwala) சபாநாயகர் பதவியிலிருந்து விலகியுள்ள நிலையில் அவருக்கு எதிராகக் கைச்சாத்திடப்பட்டுள்ள அவநம்பிக்கை பிரேரணையை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கு அவசியமில்லை என ஐக்கிய மக்கள் சக்தி (SJB) தெரிவித்துள்ளது.

எனினும், ஒழுக்க நெறியை மீறியமை தொடர்பில் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு எதிர்பார்ப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா (Ajith P Perera) தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் பதவி விலகியுள்ள போதிலும் தமது கல்வித் தகைமை தொடர்பில் இதுவரையில் உரிய வகையில் அவர் விளக்கமளிக்கவில்லை என மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேநேரம், பட்டங்களைப் பெற்றுள்ளதாகப் போலியான தகவல்களைச் சமர்ப்பித்துள்ள மேலும் பலர் ஆளும் தரப்பில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கற்றவர்களை நாடாளுமன்றத்துக்குக் கொண்டுவருவதாகக் கூறி, தேசிய மக்கள் சக்தி (NPP) பொய்யர்களை நாடாளுமன்றத்துக்குக் கொண்டு வந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இவ்வாறானவர்களைக் களையெடுப்பதற்கு, மீண்டுமொரு சிரமதானத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா கூறியுள்ளார்.

இதேவேளை, சபாநாயகர் அசோக ரன்வலவின் பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) ஏற்றுக்கொண்டதாக ஜனாதிபதியின் செயலாளர் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தார்.

இதன்படி நாளை மறுதினம் (17) மீண்டும் நாடாளுமன்றம் கூடும் போது புதிய சபாநாயகரை நியமிக்கவுள்ளதுடன் சபாநாயகர் பதவிக்கு மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, பிரதி சபாநாயகர் மொஹமட் றிஸ்வி சாலி (Mohammed Rizvi Salih), நாடாளுமன்ற உறுப்பினர்களான நிஹால் கலப்பத்தி (Nihal Galappaththi) மற்றும் லக்ஷ்மன் நிபுணாராச்சி (Lakshman Nipuna Arachchi) ஆகியோரில் ஒருவர் புதிய சபாநாயகராக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நாளை நடைபெறவுள்ள ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் புதிய சபாநாயகர் யார் என்பது குறித்து ஆலோசிக்கப்படும் என அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
articles2F0Nj1D1mrgD3fUv0MNcTa
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பல்கலைக்கழக சட்டத்தில் மாற்றம்: துறைத் தலைவர்களை நீக்கும் அதிகாரம் பேரவைக்கு! அதிபர் சேவை ஆட்சேர்ப்பிலும் விரிவான ஆய்வு.

பல்கலைக்கழகங்களின் நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் இலங்கை அதிபர் சேவையில் நிலவும் ஆட்சேர்ப்பு சிக்கல்கள் குறித்து, கல்வி...

NASA
செய்திகள்உலகம்

நிலவுக்கு உங்கள் பெயரை அனுப்ப ஓர் அரிய வாய்ப்பு: நாசாவின் புதிய திட்டத்தில் நீங்களும் இணையலாம்!

விண்வெளி ஆய்வில் ஆர்வமுள்ள பொதுமக்களின் பெயர்களை நிலவுக்கு அனுப்பும் #SendYourName எனும் உற்சாகமான திட்டத்தை அமெரிக்க...

1747723536 25 6828c2adaf2b1
செய்திகள்இலங்கை

ரயில்வே சேவையில் நெருக்கடி: கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 23 முதல் தொழிற்சங்க நடவடிக்கை!

நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் உள்ள நிர்வாகச் சிக்கல்களை முன்வைத்து, எதிர்வரும் ஜனவரி 23-ஆம் திகதிக்குப் பின்னர் நாடு...

1731919585 Ravi L
செய்திகள்அரசியல்இலங்கை

அரசாங்கம் தேர்தலைக் காலம் தாழ்த்த முடியாது: ஐ.தே.க – ஐ.ம.ச கூட்டணி குறித்து ரவி கருணாநாயக்க முக்கிய தகவல்!

மாகாணசபைத் தேர்தலை இந்த ஆண்டுக்குள் நடத்தத் தவறினால், அது அரசாங்கத்தின் எதிர்காலப் பயணத்திற்குச் சிறந்ததல்ல எனப்...