28 8
இலங்கைசெய்திகள்

அநுரவிடம் மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது! தமிழரசின் வேட்பாளர் சுட்டிக்காட்டு

Share

அநுரவிடம் மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது! தமிழரசின் வேட்பாளர் சுட்டிக்காட்டு

தமிழர்களுக்கு என்ன தீர்வு என வெளிப்படையாகக் கூறாத ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட வேட்பாளர் சந்திரஹாசன் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட வேட்பாளர் அறிமுக விழாவில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், “தென்பகுதியில் ஒரு மாற்றம் இடம்பெற்றிருக்கின்றது. ஊழலுக்கு எதிரான அரசு வேண்டும், எல்லோரும் சமமானவர்கள், எல்லோரும் இலங்கை மக்கள் என்று ஒரு மாற்றத்துக்கான அலை காணப்படுகின்ற அதேநேரம் தமிழர்கள் மத்தியில் பல குழப்பங்கள் காணப்படுகின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் குழப்பம், கட்சிக்குள் குழப்பம் என நாம் பிரிந்து நிற்கின்றோம்.

இந்தக் குழப்பங்களுக்கு மத்தியில் நாடாளுமன்றத் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காணப்படுகின்றது.

இளைஞர்கள் தற்போது கூறுகின்றார்கள் தேசிய மக்கள் சக்தியானது சமத்துவமான ஓர் அரசியலைப் பேசுகின்றது, புதிய ஓர் அரசியல் கலாசாரத்தை முன்னெடுக்கின்றது என்று. ஆனால், இடதுசாரி கட்சிகள் சமத்துவம் பேசுவது என்பது புதியதல்ல.

அந்தச் சமத்துவ அரசியலிலும் கவலையான விடயம் தமிழ் மக்களை இரண்டாம் தரப்பாகப் பார்ப்பது.

அதிலிருந்து அவர்களிடம் மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது.

அவர்கள் தமிழருடைய தீர்வு தொடர்பான தெளிவான விடயத்தை இதுவரையிலும் முன்வைக்கவில்லை. அவர்கள் அதை வெளிப்படையாகப் கூறுவதற்குப் பயப்படுகின்றார்கள். மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்” என்றும் யாழ். மாவட்ட வேட்பாளர் சந்திரஹாசன் இளங்கோவன் குறிப்பிட்டுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
articles2FDa64TGfTKDPmX85aOKjK
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள்: அவர்களை விடுவிக்கப் பாப்பரசர் லியோ உருக்கமான வேண்டுகோள்!

நைஜீரியாவில் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ (Pope Leo) உருக்கமான...

24 66ce10fe42b0d
செய்திகள்இலங்கை

தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்களே வெட்டிக் கொல்ல வேண்டும்’ என்று பொதுவெளியில்...

25 6925a9a6dc131
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற பெண் ஊழியர் மீதான பாலியல் அத்துமீறல் புகார்: ஓய்வுபெற்ற நீதிபதியின் அறிக்கையில் முக்கிய முடிவு!

நாடாளுமன்ற பெண் ஊழியர் ஒருவர் மீது பாலியல் அத்துமீறல் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என்பதை விசாரித்து அறிக்கை...