24 66652567e8603
இலங்கைசெய்திகள்

இந்த ஆண்டில் வரவு செலவுத் திட்டம் இல்லை

Share

இந்த ஆண்டில் வரவு செலவுத் திட்டம் இல்லை

இந்த ஆண்டில் வரவு செலவுத் திட்டம் (Budget) சமர்ப்பிக்கப்படாது என நிதி அமைச்சின் சிரேஸ்ட அதிகாரியொருவர் தென்னிலங்கை ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

இதன்படி, எதிர்வரும் 2025ஆம் ஆண்டின் முதல் சில மாதங்களுக்காக குறைநிரப்பு பிரேரணை சமர்ப்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டின் இறுதியில் தேர்தல் நடத்தப்பட உள்ளதாகவும் ஜனாதிபதி அல்லது புதிய அரசாங்கத்தின் கொள்கைகளின் அடிப்படையில் புதிய வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட இடமளிக்கும் நோக்கில் இந்த ஆண்டில் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய தேர்தல் நடத்தப்படுவதற்காகவும், புதிய ஆட்சி மாற்றம் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதனாலும் இம்முறை வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படாது என நிதி அமைச்சின் சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த விடயம் தொடர்பில் இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என்ற போதிலும் எதிர்வரும் மாதங்களில் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பதில் நடைமுறைச் சாத்தியப்பாடுடைய பிரச்சினைகள் உருவாகக் கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
articles2FeEKtDKWyXj0ebdxP7pcx
செய்திகள்உலகம்

வரலாற்று வெற்றி: அமெரிக்காவிடமிருந்து மீட்கப்படும் 3 பழைமைவாய்ந்த சோழர் காலச் சிலைகள்!

தமிழகத்தின் பல்வேறு ஆலயங்களில் இருந்து திருடப்பட்டு அமெரிக்காவிற்குக் கடத்தப்பட்ட மிகவும் பழைமைவாய்ந்த மூன்று சோழர் காலச்...

image 3a35841713
செய்திகள்இலங்கை

இலங்கையின் சுகாதாரத் துறையில் புதிய திருப்பம்: அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஒரே குழுவாக ஒன்றிணைந்து செயற்பட இணக்கம்!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று சபைக்கும் அனைத்து சுகாதார தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று...

rajith
செய்திகள்இலங்கை

ராஜித சேனாரத்ன மீதான ஊழல் வழக்கு: விசாரணையின் முன்னேற்ற அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு!

மீன்பிடித் துறைமுக மணல் அகழ்வுத் திட்டத்தில் அரசாங்கத்திற்குப் பாரிய நட்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் ஊழல் வழக்குத்...

images 1 8
செய்திகள்இலங்கை

சதொச வெள்ளைப்பூண்டு மோசடி: முன்னாள் விநியோக முகாமையாளர் உட்பட 3 பேர் கைது – பிணையில் விடுதலை!

2021 ஆம் ஆண்டு லங்கா சதொச நிறுவனத்தின் வெள்ளைப்பூண்டு கையிருப்பினை விற்பனை செய்ததில் அரசாங்கத்திற்கு 17...