10 10
இலங்கைசெய்திகள்

முரண்படும் தேர்தல் கருத்துக்கணிப்புகள் தொடர்பில் தேர்தல்கள் ஆணையகம் வெளியிட்ட தகவல்

Share

முரண்படும் தேர்தல் கருத்துக்கணிப்புகள் தொடர்பில் தேர்தல்கள் ஆணையகம் வெளியிட்ட தகவல்

இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது தொடர்பில் கருத்துக்கணிப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

எனினும் இந்த கருத்துக்கணிப்புக்களை தேர்தல்கள் ஆணையகம் எதிர்க்கிறது இந்தநிலையில், ஹெலகுரு (Helakuru) மற்றும் இன்ஸ்டிடியூட் ஃபோர் ஹெல்த் பொலிசி (IHP) ஆகியவை கருத்துக்கணிப்புக்களை மேற்கொண்டு வருகின்றன.

ஹெலகுரு என்பது ஒரு பிரபலமான சிங்கள மொழி செயலியாகும். இந்த செயலியின் கணிப்பின்படி அநுரகுமார திசாநாயக்கவுக்கு 80வீத வெற்றி கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இன்ஸ்டிடியூட் ஃபோர் ஹெல்த் பொலிசி, அநுரகுமாரவுக்கு 37 வீத வெற்றி கிடைக்கும் என்றும் சஜித் பிரேமதாசவுக்கு 36 வீத வெற்றி கிடைக்கும் என்றும் கணித்துள்ளது.

இருப்பினும், கடைசி நிமிட அரசியல் மாற்றங்களைக் கணக்கிட இயலாமை காரணமாக இந்த கருத்துக்கணிப்புக்களை விமர்சகர்கள் நிராகரித்துள்ளனர்.

குறிப்பாக ஹெலகுரு செயலிக்கு 30ஆயிரம் பேர் தமது கருத்துக்களை கூறினாலும், அதில் பெரும்பாலானவர்கள் சிங்களவர்கள் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், ஹெலகுரு தங்கள் செயலியின் பயனர்களை நம்பியிருப்பதால், கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்கள் இளைஞர்களாகவே உள்ளனர் என்ற விடயமும் வெளிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும் இந்த கருத்துக் கணிப்புகள், தேர்தலில் ஒரு செயற்கையான தலையீடு என்று தேர்தல்கள் ஆணையகம் குறிப்பிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
articles2FVIVe6pP2puuipbGIu7f9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாவலப்பிட்டி பிரதேச செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: மின்னஞ்சலால் பரவிய பதற்றம் – தேடுதல் வேட்டை!

நாவலப்பிட்டி, பஸ்பாகே கோரள பிரதேச செயலகத்தின் களஞ்சிய அறையில் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்ட...

lXCde1e0G7ygeggbmYlO4CSM1NM
இலங்கைசெய்திகள்

பண்டிகைக் காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளுக்கு ஜாக்பாட்: ஒரே நாளில் 62 மில்லியன் ரூபாய் வருமானம்!

நத்தார் பண்டிகை மற்றும் தற்போது நடைபெற்று வரும் பாடசாலை விடுமுறைக்காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளின் சுங்க வரி...

MediaFile 1 7
செய்திகள்அரசியல்இலங்கை

டித்வா புயல் பாதிப்பு: விவசாய மற்றும் மீனவ ஓய்வூதியம் பெறுவதற்கான கால எல்லை நீடிப்பு!

‘டித்வா’ (Titli) புயல் மற்றும் நிலவும் அனர்த்த நிலைமை காரணமாக, விவசாய மற்றும் மீனவ ஓய்வூதியதாரர்கள்...

Nalinda Jayathissa
செய்திகள்அரசியல்இலங்கை

நிபந்தனைகளை மீறினால் அலைவரிசைகளின் அனுமதிப்பத்திரம் ரத்து: அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ எச்சரிக்கை!

தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திர நிபந்தனைகள் மீறப்படும் பட்சத்தில், அவற்றை மீளப்பெறும் அதிகாரம் பாடத்திற்கு பொறுப்பான...