7 19
இலங்கைசெய்திகள்

அநுர அரசின் அதிரடி : பலர் கலக்கத்தில்

Share

சட்டவிரோத சொத்துக்குவிப்பு தொடர்பில் விசேட விசாரணை பிரிவு இலங்கையில் சட்டவிரோதமான முறையில் சொத்துக் குவிப்புக்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக விசேட விசாரணை பிரிவு ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

இந்த விlயத்தை விசாரணை பிரிவு பழைய பொலிஸ் தலைமையாக கட்டிடத்தில் நிறுவப்பட்டுள்ளதுடன் இன்றைய தினம் இந்த அலுவலகம் ஆர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் தலைமையில் இன்று முற்பகல் குறித்த பிரிவு அங்குரார்பணம் செய்யப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் பணம் சொத்துக்கள் குவித்தல் தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளது. பணிப்பாளர் நாயகம் ஒருவரின் தலைமையின் கீழ் இந்த விசாரணை பிரிவு இயங்க உள்ளதாகவும் பிரதி பனிப்பாளர் நாயகம் ஒருவரும் இந்தப் பிரிவிற்கு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிரதி பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்ட 3 ஆண்டுகளுக்கு இந்த பிரிவின் பணிப்பாளர் நியாயமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனத்தை தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதித்துள்ளது. குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் நிதி குற்ற விசாரணை பிரிவு ஆகியனவற்றின் சிரேஸ்ட பொலிஸ் மா அதிபராக அசங்க கரவிட்ட கடமையாற்றி வருகின்றார்.

குற்றம் ஒன்றின் மூலம் உழைக்கப்படும் பணம் சொத்துக்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளது.

சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட சொத்துக்களை 30 நாட்களுக்கு தடை செய்யவோ அல்லது பறிமுதல் செய்வதற்கோ இந்த விசேட விசாரணைப் பிரிவிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் குவிக்கப்பட்ட சொத்துக்கள் வெளிநாடுகளில் காணப்பட்டாலும் இந்த புதிய சட்டத்தின் மூலம் அவை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
25 68f7986211c31
செய்திகள்இலங்கை

வவுனியா மாநகர சபை செயற்பாடுகளுக்கு இடைக்காலத் தடை: மேலதிக ஆசனப் பிரச்சினைக்கு ஜனாதிபதி சட்டத்தரணி ஆஜர்!

வவுனியா மாநகர சபையின் செயற்பாடுகளுக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் எதிர்வரும் நவம்பர் 19ஆம் திகதி வரை இடைக்காலத்...

articles2FFRfdZpigOe1FxwuUE5O6
இலங்கைசெய்திகள்

இஷாரா செவ்வந்தியுடன் தொடர்புடைய நால்வர் யாழ். மற்றும் கிளிநொச்சியில் கைது!

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: இஷாரா செவ்வந்தியுடன் தொடர்புடைய நால்வர் யாழ், கிளிநொச்சியில் கைது! ஒழுங்கமைக்கப்பட்ட...

25 68f843287a66a
செய்திகள்இலங்கை

வடக்கு முதலமைச்சர் வேட்பாளர் தேர்வில் தேசிய மக்கள் சக்தி தீவிரம் – தமிழரசுக் கட்சியின் சுமந்திரனும் தயார்!

வரும் மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர்களாகக் களமிறங்கக்கூடிய நபர்கள் தொடர்பில் பிரதான கட்சிகள் தீவிர...

IMG 0949
செய்திகள்உலகம்

தென் கொரியாவில் வசிக்கும் தெவிநுவர பிரதான கடத்தல்காரர்: போதைப்பொருள் வலையமைப்பு குறித்து தீவிர விசாரணை!

மாத்தறை – தெவிநுவர பிரதேசத்தில் செயல்படுவதாகக் கூறப்படும் போதைப்பொருள் வலையமைப்பு தொடர்பாக விசாரணை அதிகாரிகள் தற்போது...