20 2
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டிலிருந்து வருவோருக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் நவீன வசதி

Share

வெளிநாட்டிலிருந்து வருவோருக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் நவீன வசதி

வெளிநாடுகளிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரும் பயணிகளை விமானத்தில் இருந்து இறக்கும் ஏணிகளை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்திற்குள் செயற்படும் பேருந்துகள் மற்றும் விமானங்களை அணுகப் பயன்படுத்தப்படும் ஏணிகள் மிகவும் பழமையானவை பல குற்றச்சாட்டுக்கள் பயணிகளால் முன்வைக்கப்பட்டுள்ளன.

அண்மையில் குறித்த ஏணியில் இறங்கும் போது பயணி ஒருவர் தவறி வீழ்ந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் பயணிகளின் பாதுகாப்பு குறித்து விமான நிலைய நிர்வாகம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இதனையடுத்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு புதிய பேருந்துகள் மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய ஏணிகளை கொள்வனவு செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது சேவையில் ஈடுபடும் பேருந்துகள் மற்றும் ஏணிகள் 30 வருடத்திற்கு மேலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...