அதிவேகப் பாதைகளில் புதிய பாதுகாப்புச்சேவை

tamilni 563

அதிவேகப் பாதைகளில் புதிய பாதுகாப்புச்சேவை

இலங்கையின் அதிவேகப் பாதைகளில் நிகழும் விபத்து தொடர்பான நடவடிக்கைகளை கையாளும் பொறுப்பு ரக்னா லங்கா பாதுகாப்புச் சேவைக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாதுகாப்பு அமைச்சின் கீழ் தனியார் நிறுவனமாக செயற்படும் ரக்னா லங்கா நிறுவனம், தற்போதைக்கு அரச நிறுவனங்களின் பாதுகாப்பு சேவைகளைப் பொறுப்பெடுத்துள்ளது.

இந்நிலையில் அதிவேகப் பாதைகளின் விபத்து நிவாரண சேவைகளும் ரக்னா லங்கா நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

எனினும் விபத்துக்களின் போது மீட்பு நடவடிக்கைகள், காயமடைந்தவர்களுக்கான முதலுதவி உள்ளிட்ட விபத்து தொடர்பான எந்தவொரு பயிற்சியும் இதுவரை காலமும் ரக்னா லங்கா நிறுவன ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version