24 664ed985f3802
இலங்கைசெய்திகள்

தன்னார்வு தொண்டு நிறுவனங்களின் நிதி நடவடிக்கைகளை ஆராய சட்டம்

Share

தன்னார்வு தொண்டு நிறுவனங்களின் நிதி நடவடிக்கைகளை ஆராய சட்டம்

இலங்கையின் (Sri Lanka) பாலின உரிமைகள், மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக நிர்வாகம் போன்ற திட்டங்களுக்காக பல்வேறு வெளிநாட்டு அமைப்புக்களால் நிதியளிக்கப்பட்ட பல முன்னணி தன்னார்வ தொண்டு நிறுவனங்களை (NGO) கண்காணிக்க புதிய சட்டமொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

தொண்டு நிறுவனங்களுக்கு கிடைத்த நிதித்தொகைகள் தொடர்பில் உரிய கண்காணிப்புகள் மேற்கொள்ளப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே இந்த சட்டம் கொண்டு வரப்படவுள்ளது..

இலங்கையின் தன்னார்வு தொண்டு செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு கடந்த ஆண்டு 33 பில்லியன் ரூபாய் நிதி கிடைக்கப்பெற்றுள்ளது

இந்நிலையில், நிறுவன பதிவாளரின் கீழ் மாத்திரமே பதிவு செய்யப்பட்டுள்ள முக்கிய தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு பெரும் தொகை நிதி கிடைத்திருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது.

இதனிடையே முன்மொழியப்பட்ட அரசு சாரா நிறுவனங்கள் பதிவு மற்றும் மேற்பார்வை யோசனை நாடாளுமன்றத்தில் சட்டமாக்கப்படுவதற்கான இறுதி கட்டத்தில் உள்ளது.

இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் அரசு சாரா நிறுவனங்களின் செலவுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து முறையான சரிபார்ப்பை மேற்கொள்ளமுடியும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதேவேளை முன்மொழியப்பட்டுள்ள இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த முன்னணி அரச சார்பற்ற நிறுவனங்கள் கொழும்பை தளமாகக் கொண்ட இராஜதந்திர சமூகத்திடம் முறையிட்டுள்ளன.

இதனையடுத்தே அந்த சட்டத்தில் இணைக்கப்பட வேண்டிய சில அவதானிப்புகளை அமெரிக்க வெளியுறவுத்துறையும் இலங்கைக்கு அனுப்பியுள்ளது.

அமெரிக்காவின் இந்த அவதானிப்புகள், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் பிற சிவில் சமூக அமைப்புகளுடன் இணைந்து, புதிய சட்டமூலத்தை உருவாக்குவதற்கான பரிசீலனைக்காக சட்ட வரைவாளர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கையின் பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...