13 12
இலங்கைசெய்திகள்

கடவுச்சீட்டு வரிசைக்கு பதிலாக பொலிஸார் புதிய நடைமுறை

Share

கடவுச்சீட்டு வரிசைக்கு பதிலாக பொலிஸார் புதிய நடைமுறை

முன்னுரிமை அடிப்படையில் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக பொலிஸார் புதிய நடைமுறையொன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

அதன் பிரகாரம் கொழும்பு தெற்கு பிரதிப் பொலிஸ் மா அதிபரின் அலுவலகத்தில் விண்ணப்பப் படிவம் உள்ளிட்ட ஆவணங்களைச் சமர்ப்பித்து, சிபாரிசு பெற்றுக் கொள்கின்றவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்கான இலக்கமொன்று வழங்கப்படுகின்றது.

எனினும் குறித்த பிரதிப் பொலிஸ் மா அதிபரின் பதவி இலச்சினையை போலியாகத் தயாரித்து கடவுச்சீட்டு விண்ணப்பதாரிகளுக்கு முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் தற்போதைக்கு புகைப்பட ஸ்டூடியோ உரிமையாளர் ஒருவரும் அவரது உதவியாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கடவுச்சீட்டு விவகாரத்தில் பொலிசாரின் தலையீடு அநாவசியமானது என்றும் விண்ணப்பதாரிகள் பலரும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

ஏனெனில் புதிய நடைமுறையின் பிரகாரம் கடவுச்சீட்டொன்றைப் பெற்றுக் கொள்வதற்காக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகம் மற்றும் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்திலும் இரண்டு இடங்களில் வரிசையில் காத்திருக்க வேண்டி ஏற்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...