13 12
இலங்கைசெய்திகள்

கடவுச்சீட்டு வரிசைக்கு பதிலாக பொலிஸார் புதிய நடைமுறை

Share

கடவுச்சீட்டு வரிசைக்கு பதிலாக பொலிஸார் புதிய நடைமுறை

முன்னுரிமை அடிப்படையில் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக பொலிஸார் புதிய நடைமுறையொன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

அதன் பிரகாரம் கொழும்பு தெற்கு பிரதிப் பொலிஸ் மா அதிபரின் அலுவலகத்தில் விண்ணப்பப் படிவம் உள்ளிட்ட ஆவணங்களைச் சமர்ப்பித்து, சிபாரிசு பெற்றுக் கொள்கின்றவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்கான இலக்கமொன்று வழங்கப்படுகின்றது.

எனினும் குறித்த பிரதிப் பொலிஸ் மா அதிபரின் பதவி இலச்சினையை போலியாகத் தயாரித்து கடவுச்சீட்டு விண்ணப்பதாரிகளுக்கு முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் தற்போதைக்கு புகைப்பட ஸ்டூடியோ உரிமையாளர் ஒருவரும் அவரது உதவியாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கடவுச்சீட்டு விவகாரத்தில் பொலிசாரின் தலையீடு அநாவசியமானது என்றும் விண்ணப்பதாரிகள் பலரும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

ஏனெனில் புதிய நடைமுறையின் பிரகாரம் கடவுச்சீட்டொன்றைப் பெற்றுக் கொள்வதற்காக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகம் மற்றும் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்திலும் இரண்டு இடங்களில் வரிசையில் காத்திருக்க வேண்டி ஏற்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 47
செய்திகள்இந்தியா

டெல்லி AI உச்சி மாநாடு: கடைசி நேரத்தில் பின்வாங்கிய பில் கேட்ஸ்! – எப்ஸ்டீன் விவகார சர்ச்சை காரணமா?

டெல்லியில் நடைபெற்று வரும் ‘இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில்’ (India AI Impact...

image 1200x800 45
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் அதிரடி! – ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது; எப்ஸ்டீன் விவகாரத்தில் அரசு ரகசியங்களை கசியவிட்டாரா?

பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புகள் மற்றும் பொது அலுவலகத்தில் தவறான நடத்தையில் ஈடுபட்டதாக எழுந்த...

image 1200x800 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவை மீண்டும்? – 310 மீட்டர் நீளத்தில் புதிய இறங்குதுறை அமைக்கத் திட்டம்!

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமன்னார் இறங்குதுறையை (Jetty) நவீனமயமாக்குவதற்கான முதற்கட்ட மேம்பாட்டுத் திட்டம்...