இலங்கைசெய்திகள்

கடவுச்சீட்டு வரிசைக்கு பதிலாக பொலிஸார் புதிய நடைமுறை

13 12
Share

கடவுச்சீட்டு வரிசைக்கு பதிலாக பொலிஸார் புதிய நடைமுறை

முன்னுரிமை அடிப்படையில் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக பொலிஸார் புதிய நடைமுறையொன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

அதன் பிரகாரம் கொழும்பு தெற்கு பிரதிப் பொலிஸ் மா அதிபரின் அலுவலகத்தில் விண்ணப்பப் படிவம் உள்ளிட்ட ஆவணங்களைச் சமர்ப்பித்து, சிபாரிசு பெற்றுக் கொள்கின்றவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்கான இலக்கமொன்று வழங்கப்படுகின்றது.

எனினும் குறித்த பிரதிப் பொலிஸ் மா அதிபரின் பதவி இலச்சினையை போலியாகத் தயாரித்து கடவுச்சீட்டு விண்ணப்பதாரிகளுக்கு முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் தற்போதைக்கு புகைப்பட ஸ்டூடியோ உரிமையாளர் ஒருவரும் அவரது உதவியாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கடவுச்சீட்டு விவகாரத்தில் பொலிசாரின் தலையீடு அநாவசியமானது என்றும் விண்ணப்பதாரிகள் பலரும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

ஏனெனில் புதிய நடைமுறையின் பிரகாரம் கடவுச்சீட்டொன்றைப் பெற்றுக் கொள்வதற்காக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகம் மற்றும் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்திலும் இரண்டு இடங்களில் வரிசையில் காத்திருக்க வேண்டி ஏற்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...