24 661f69ec21356
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் உருவாக்கப்பட்ட புதிய பதவிக்கு 6 இலட்சம் சம்பளம்

Share

நாடாளுமன்றத்தில் உருவாக்கப்பட்ட புதிய பதவிக்கு 6 இலட்சம் சம்பளம்

நாடாளுமன்றத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட பதவியான ‘பாதீட்டு அதிகாரிக்கு’ மொத்த மாதச் சம்பளமாக 665,000 ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வ இணையத்தளத்தின்படி, அதிகாரியின் அடிப்படை சம்பளம் 408,360 என்றும், அது அனைத்து கொடுப்பனவுகளுடன் மொத்தம் 665,000 ரூபாவாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

அதிகாரியின் வயது வரம்பு 65 ஆக இருக்க வேண்டும். என்பதோடு அரச வரவு செலவுத் திட்டம், நிதிக் கொள்கை, அல்லது பொருளாதார பகுப்பாய்வு ஆகியவற்றில் குறைந்தபட்சம் 15 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

எவ்வாறாயினும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பொது நிதிக்கான குழுவின் தலைவருமான ஹர்ச டி சில்வா, முன்னாள் மூத்த பல்தரப்பு முகவர் நிபுணத்துவம் இந்த வேலைக்கு பொருந்துவார் என்று கூறியுள்ளார்.

அவரைப் பொறுத்தவரை பாதீட்டு அதிகாரி ஐந்தாண்டு ஒப்பந்தத்தில் பணியமர்த்தப்படுவார். 2023 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க நாடாளுமன்ற வரவு செலவுத் திட்ட அலுவலகச் சட்டத்தின் 14 ஆவது பிரிவின் கீழ் இந்தப் பதவி உருவாக்கப்பட்டது.

தகுதி வாய்ந்த, நேர்மையான, உயர்ந்த ஒழுக்க நேர்மை மற்றும் நல்ல நற்பெயரைக் கொண்ட இலங்கைப் பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. துணை பாதீட்டு; அதிகாரி பதவியும் இந்த சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற பாதீட்டு அலுவலகம் அரசியலமைப்பின் கீழ் பொது நிதி பொறுப்புகளை நிறைவேற்றுவதில் சட்டமன்றத்திற்கு உதவும் நோக்கத்துடன் நிறுவப்பட்டது. நாடாளுமன்ற பாதீட்டு அலுவலகம் சுதந்திரமானதாகவும், கட்சி சார்பற்றதாகவும், எந்தவொரு அரசியல் செல்வாக்கிலிருந்தும் பிரத்தியேகமாகவும் பாதுகாக்கப்பட்டதாகவும் இருக்கும்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...