ரணிலை இரகசியமாக சந்தித்த மொட்டு எம்.பிக்கள்
இலங்கைசெய்திகள்

ரணிலை இரகசியமாக சந்தித்த மொட்டு எம்.பிக்கள்

Share

ரணிலை இரகசியமாக சந்தித்த மொட்டு எம்.பிக்கள்

புதிய அரசியல் கூட்டணியயை உருவாக்கும் நோக்கத்தோடு நாடாளுமனற உறுப்பினர் நிமல் லான்சாவுடன் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 5 கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில், கலந்துரையாடலில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் நெருங்கிய வட்டாரங்களில் இருந்து செய்தி வெளியாகியுள்ளன.

மேலும், அடுத்த ஆண்டு ஜனவரியில் இவர்களின் புதிய அரசியல் கூட்டணி ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

புதிய கூட்டணியில் சேருவதற்கு லான்சாவுடன் பல கட்சிகள் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவற்றுள் மொட்டு கட்சியின் பிரதிநிதிகளும் அடங்குவதாக குறித்த அரசியல் வட்டங்களினால் தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் லான்சா, அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடிய போது புதிய கூட்டணி அமைப்பது குறித்து அறிவித்துள்ளார்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்களான அனுர பிரியதர்ஷன யாப்பா, அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, நாடாளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவண்ண, துமிந்த திஸாநாயக்க, அமைச்சர் நளின் பெர்னாண்டோ, அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் பிரியங்கர ஜயரத்ன ஆகியோர் ஏற்கனவே லான்சாவை சந்தித்து கூட்டணி அமைப்பது தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக அரசியல் வட்டாரங்களினால் தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 76
செய்திகள்உலகம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பான பின்னணி!

ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான்...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...

Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...