3 36
இலங்கைசெய்திகள்

ரணில் தலைமையில் புதிய அரசியல் கட்சி

Share

புதிய தொழில்நுட்பத்துடன் முன்னேறி, புதிய அரசியல் கட்சியை நிறுவுவதற்கு பாடுபடுவேன் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகள் குழுவில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நாடாளுமன்றத் தேர்தலைக் காட்டிலும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் குறைவான வாக்குகளைப் பெற்று அரசாங்கம் முதல் தடவையாக வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

அரசாங்கத்தின் கடந்த கால நடவடிக்கைகளினால் மக்கள் ஆணை வழங்கியவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இப்போது நாம் புதிய கட்சி ஒன்றை உருவாக்க வேண்டும் என ரணில் இதன்போது கூறியுள்ளார்.

உள்ளூராட்சி நிறுவனங்களின் பிரதிநிதிகளாக புதிய உறுப்பினர்கள் கட்சிக்காக ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவியேற்றனர்.

குறித்த பதவியேற்பு விழா ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையகமான சிறிகொத்தாவில் கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் நடைபெற்றது.

முன்னணி கட்சி ஆர்வலர்கள் உட்பட ஒரு குழு மக்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
30 4
உலகம்செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பின் சீனா – வடகொரியா பயணிகள் தொடருந்து சேவை நாளை மீள ஆரம்பம்!

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த சீனா மற்றும் வடகொரியா இடையிலான...

29 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேலியகொட மீன் சந்தை கழிவு உரம் தயாரிப்பு: பொது சுகாதார பரிசோதகர் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

பேலியகொட மெனிங் மீன் சந்தையில் எஞ்சியிருக்கும் மீன்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்று உரம் தயாரிக்கும்...

28 4
செய்திகள்விளையாட்டு

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து ஈரான் விலகல்: விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு!

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் கூட்டுத் தலைமையின்கீழ் நடைபெறவுள்ள 2026 உலகக்கோப்பை கால்பந்து...

27 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: மசகு எண்ணெய் விலை 200 டொலரை எட்டக்கூடும் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது...