3 36
இலங்கைசெய்திகள்

ரணில் தலைமையில் புதிய அரசியல் கட்சி

Share

புதிய தொழில்நுட்பத்துடன் முன்னேறி, புதிய அரசியல் கட்சியை நிறுவுவதற்கு பாடுபடுவேன் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகள் குழுவில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நாடாளுமன்றத் தேர்தலைக் காட்டிலும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் குறைவான வாக்குகளைப் பெற்று அரசாங்கம் முதல் தடவையாக வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

அரசாங்கத்தின் கடந்த கால நடவடிக்கைகளினால் மக்கள் ஆணை வழங்கியவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இப்போது நாம் புதிய கட்சி ஒன்றை உருவாக்க வேண்டும் என ரணில் இதன்போது கூறியுள்ளார்.

உள்ளூராட்சி நிறுவனங்களின் பிரதிநிதிகளாக புதிய உறுப்பினர்கள் கட்சிக்காக ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவியேற்றனர்.

குறித்த பதவியேற்பு விழா ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையகமான சிறிகொத்தாவில் கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் நடைபெற்றது.

முன்னணி கட்சி ஆர்வலர்கள் உட்பட ஒரு குழு மக்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 683bc7c6b9af4
இலங்கைசெய்திகள்

மக்களுக்கு பொருட்களை வழங்கியவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர்

மக்களுக்கு பொருட்களை வழங்கியவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளதாக சர்வஜன பலய கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். முன்னாள்...

25 683beddc44bb5
இலங்கைசெய்திகள்

எரிவாயு விலை திருத்தம் தொடர்பான முக்கிய அறிவிப்பு..

ஜூன் மாதத்தில் தங்களது எரிவாயுவின் விலையில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படமாட்டாது என்று லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம்...

4
இலங்கைசெய்திகள்

இலங்கை வரும் ஐநாவின் உயர் அதிகாரி.. தொடர் அழுத்தத்தில் அநுர அரசாங்கம்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஆணையாளர் வோல்கர் டர்க், இந்த மாதம் அல்லது...

images
இலங்கைசெய்திகள்

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு திறப்பு

மத்திய மலைநாட்டில் பெய்து வரும் மழை காரணமாக மலையகத்தில் இருக்கின்ற நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம்...