24 66937e3d30ff1
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்தி சஜித் தலைமையில் புதிய கூட்டணி

Share

ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்தி சஜித் தலைமையில் புதிய கூட்டணி

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான அறிவிப்பு ஆகஸ்ட் 1ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்பட்டு, பரந்துப்பட்ட அரசியல் கூட்டணி ஒன்று அமைக்கப்படவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர், ”நாட்டைச் சூறையாடிய குழுவுக்கு மக்கள் அதிகாரத்தை வழங்க மாட்டார்கள்.

தற்பெருமை மட்டுமே கொண்ட, அனுபவமில்லாத கூட்டத்திற்கான அரசாங்கமாக புதிய அரசாங்கம் அமையாது என்பதை மக்கள் வாக்குகளின் மூலம் வெளிப்படுத்துவார்கள்.

கொழும்பில் பெரும் மாநாட்டை நடத்தி இந்த அறிவிப்பை வெளியிட ஐக்கிய மக்கள் சக்தி தயாராகி வருகின்றது.

மேலும், சஜித் பிரேமதாச 1994ஆம் ஆண்டுக்கு பிறகு மக்களுக்கு சேவை செய்யவந்த சிறந்த தலைவர். அவர் தனது குடும்பத்தை காப்பாற்றவோ அல்லது தனது நண்பர்களுக்கு சலுகைகளை வழங்கவோ பணியாற்ற மாட்டார்.” என்றார்.

இந்நிலையில் உத்தேச ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்திய ஐக்கிய மக்கள் சக்தியை தலைமைத்துவமாக கொண்ட அரசியல் கூட்டணி தொடர்பில் கொழும்பில் பெரும் மாநாட்டை நடத்தி அறிவிப்பு விடுக்கப்படவுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
8556906 vijay
செய்திகள்இந்தியா

மாவீரர் தினத்தில் ‘தமிழ்த் தேசியத்திற்காகப் போராடிய மாவீரர்களை வணங்குவோம்’: தளபதி விஜய் நினைவுகூர்ந்து பதிவு!

தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி வீர மரணமடைந்த மாவீரர்களை, தமிழ்த் வெற்றிக் கழகத்தின் (Tamilaga Vettri...

images 2 4
செய்திகள்இந்தியா

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்கள் எங்கே? சர்வதேசத்தின் மௌனம் ஏன்? சீமான் கேள்வி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் மாவீரர்...

images 12
செய்திகள்இலங்கை

டிட்வா புயல் திருகோணமலையிலிருந்து 50 கி.மீ தெற்கே மையம்; செட்டிக்குளத்தில் 315 மி.மீ அதிகபட்ச மழைவீழ்ச்சி பதிவு!

நாட்டில் நிலவும் மோசமான காலநிலைக்கான காரணமான ‘டிட்வா’ (DITWA) புயல் குறித்த முக்கியத் தகவலை வளிமண்டலவியல்...

Flood
செய்திகள்இலங்கை

அத்தனகலு ஓயாவைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் பெரும் வெள்ள அபாயம்: மக்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, அத்தனகலு ஓயாவைச் (Attanagalu Oya) சுற்றியுள்ள தாழ்வான...