rtjy 27 scaled
இலங்கைசெய்திகள்

நாடு மீண்டும் வரிசை யுகத்திற்கு செல்லும் அபாயம்

Share

நாடு மீண்டும் வரிசை யுகத்திற்கு செல்லும் அபாயம்

நாட்டில் மீண்டும் நெருக்கடி ஏற்பட்டு வரிசை ஏற்படும் அபாயம் தலைதூக்கும் சாத்தியம் அதிகரித்துள்ளதாக புதிய மார்க்சிச லெனின் கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா.செந்தில்வேல் தெரிவித்தார்.

இந்நிலையில் அண்மையில் பங்களாதேஷிடம் இருந்து பெற்றுக்கொண்ட கடனின் ஒரு பகுதி மீள வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இந்த ஆட்சியாளர்கள் மக்களிடம் கூறியது என்னவென்றால் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் சர்வதேச நாணய நிதி கிடைத்தவுடன் நாங்கள் இலங்கையை சொர்க்கமாக்குவோம் என கூறியிருந்தனர்.

அண்மையில் பங்களாதேஷிடம் இருந்து பெற்றுக்கொண்ட கடனின் ஒரு பகுதி மீள வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. உண்மையில் அதுவல்ல பிரச்சனை.

2.9 பில்லியன் அமெரிக்க டொலரின் ஒரு பகுதியை தான் சர்வதேச நாணய நிதியம் வழங்கியிருந்தது. முழுக் கடனையும் அடைப்பதற்கு அவர்கள் வழங்கி இருக்கவில்லை.

இவர்கள் தொடர்ந்தும் கடன் வாங்கிக் கொண்டு இருக்கின்றார்கள். வேறு வேறு நாடுகள் வேறு வேறு அமைப்புகள், ஊடாக கடன் வாங்குகின்றார்கள் தவிர கடன் கொடுப்பதாக இல்லை.

தற்பொழுது ஏற்பட்டுள்ள நிலை தான் உள்நாட்டு கடனை மறுசீரமைக்கின்றோம் என்பது. இந்த EPF, ETF போன்ற மிகப்பெரிய நிதி இருக்கின்ற இடத்தில் கை வைத்துள்ளார்கள்.

அது எடுக்கப்பட்டால் இந்த மக்களுக்கு எதுவுமே இல்லை. இந்த ஆட்சியாளர்கள் ஒரு கடனை அடைப்பதற்கு மேலும் பல கடன்களை பெறுகின்றார்கள்.

இந்த ஆட்சியாளர்கள் வாங்குகின்ற வேலையைத் தான் செய்கின்றார்கள். ஏன் என்றால் நாட்டினுடைய உற்பத்தி , இந்த மக்கள் இணைந்து உற்பத்தியை பெருக்கினால் மட்டுமே இவர்கள் இந்த கடனில் இருந்து தவற முடியும் என்பது நிதர்சனம்.

இதன் மூலம் தான் தேசிய பொருளாதாரத்தை படிப்படியாக கட்டி அமைக்க முடியும் என தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
1733038624 vehicle import
செய்திகள்இலங்கை

வாகன இறக்குமதிகள் 2026 இல் இயல்பு நிலைக்குத் திரும்பும்: மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை!

இலங்கையில் வாகன இறக்குமதிகள், 2026 ஆம் ஆண்டில் சாதாரண நிலைக்குத் திரும்பும் என்று மத்திய வங்கியின்...

25 6787f6ba5e006
செய்திகள்உலகம்

AI சகாப்தத்தில் தொடரும் பணிநீக்கங்கள்: மெட்டா நிறுவனத்தில் 600 ஊழியர்களுக்குப் பணி நீக்கம்!

இன்றைய காலக்கட்டத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தால் நன்மை ஏற்பட்டாலும், பெரும்பாலும் தீங்காகவே அமைகிறது. அந்த வகையில்,...

gold01
இலங்கைசெய்திகள்

தங்கத்தின் விலையில் தலைகீழ் மாற்றம்: ஒரே வாரத்தில் ரூ. 77,000 குறைவு!

இலங்கையில் (Sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது....

10745 24 10 2025 10 3 0 5 IMG 20251024 WA0029
செய்திகள்இலங்கை

ஆந்திராவில் ஆம்னி பேருந்தில் பயங்கர தீ விபத்து: 25 பயணிகள் உடல் கருகி பலி!

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் இன்று (அக்டோபர் 24) அதிகாலை ஏற்பட்ட பயங்கர விபத்தில், ஆம்னி...