24 665d0f737a78a
இலங்கைசெய்திகள்

கிராமிய தொழில் முயற்சியாளர்களுக்கு புதிய கடன் திட்டம்

Share

கிராமிய தொழில் முயற்சியாளர்களுக்கு புதிய கடன் திட்டம்

கிராமிய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் புதிய கடன் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardena) தெரிவித்துள்ளார்.

புதிய தொழில் தொடங்க விரும்புவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், இதன் மூலம் கிராமத்தின் பொருளாதாரம் மேம்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

மற்றைய கடன் திட்டங்களின் மூலம் கடன் பெற்றிருந்தாலும் அறிமுகப்படுத்தப்படும் புதிய கடன் திட்டத்தில் கடன் பெறுவதில் சிக்கல்கள் ஏற்படாது என்றும் அவர் கூறியுள்ளார்.

குறித்த கடன் திட்டத்தின் மூலம் 5 இலட்சம் பெண் தொழில்முனைவோரை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, வீட்டிலேயே அன்றாட நடவடிக்கைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட பெண்கள் இந்தக் கடன் அமைப்பில் இணைந்து புதிய வருமானத்தை ஈட்ட முடியும் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 6 2
செய்திகள்உலகம்

பிரித்தானியாவில் புதிய சகாப்தம்: கடவுச்சீட்டு சோதனை இல்லை, நீண்ட வரிசை இல்லை! – AI மூலம் விமான நிலையங்களில் முக ஸ்கேன் அனுமதி!

பிரித்தானியா, தனது விமான நிலையம் ஒன்றில், நவீன தொழில்நுட்பம் மூலம் கடவுச்சீட்டு சோதனை இல்லாமலே பயணிகளை...

skynews donald trump benjamin netanyahu 7080062
செய்திகள்உலகம்

ஊழல் வழக்கில் நெதன்யாகுவை மன்னிக்க வேண்டும்: ட்ரம்ப் கடிதத்துக்கு இஸ்ரேல் ஜனாதிபதி அலுவலகம் மறுப்பு!

ஊழல் வழக்குகளில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை (Benjamin Netanyahu) மன்னிக்குமாறு அந்நாட்டு ஜனாதிபதி ஐசக்...

articles2FgwJ5r85aOgQuM4EhGVg6
அரசியல்இலங்கைசெய்திகள்

நுகேகொடைப் பேரணி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நினைவூட்டவே: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அழுத்தம் கொடுப்போம் – நாமல் ராஜபக்ச!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவிருக்கும் அரசாங்கத்திற்கு எதிரான பொதுப் பேரணி, அரசாங்கம் மக்களுக்கு...

25 6915d20fc755f
செய்திகள்அரசியல்இலங்கை

வென்றெடுக்கப்பட்ட அதிகாரம் பொதுமக்களுக்காக மட்டுமே; சட்டத்தின் முன் அனைவரும் சமமே”: கார்த்திகை வீரர்கள் தினத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க!

வென்றெடுக்கப்பட்ட அதிகாரம் பொதுமக்களுக்காக மாத்திரமே என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று நடைபெற்ற கார்த்திகை வீரர்கள்...