இலங்கைசெய்திகள்

மனிதர்களை குளிப்பாட்டும் புதிய இயந்திரம் : தொழிநுட்பத்தின் அதி உச்சம்

Share
18 10
Share

மனிதர்களை குளிப்பாட்டும் புதிய இயந்திரம் : தொழிநுட்பத்தின் அதி உச்சம்

ஜப்பானில் மனிதர்களை குளிப்பாட்டும் புதிய இயந்திரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதிக வேலைப்பளு அல்லது சோர்வினால் குளிக்க தாமதமாகும் நேரத்தில், ஜப்பானின் புதிய Human Washing Machine ஒரே தீர்வாக அமையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இயந்திரம் ஆடைகளை போலவே மனிதர்களையும் 15 நிமிடத்தில் குளிப்பாட்டி உலர்த்திவிடும்.

ஜப்பானின் Science Co, நிறுவனம் உருவாக்கிய இந்த இயந்திரம், குளிக்க நேரமில்லாதவர்களுக்கு பெரும் சுலபமாக இருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதில் ஒருவர் அமர்ந்தவுடன், செயற்கை நுண்ணறிவு (AI) அவர்களின் தோல் மற்றும் உடலின் தன்மையை அடிப்படையாகக் கொண்டு தண்ணீரின் வெப்பநிலையும், சுத்தப்படுத்தும் முறைகளையும் சரிசெய்யும்.

1970 ஆம் ஆண்டில் ஜப்பானின் World Sanyo Electric Co, நிறுவனம் தற்போது Panansonic என பிரபலமாக அறியப்படுவதுடன் உருவாக்கிய பழைய வடிவமைப்பின் மேம்பட்ட பதிப்பாக இந்த இயந்திரம் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...