18 10
இலங்கைசெய்திகள்

மனிதர்களை குளிப்பாட்டும் புதிய இயந்திரம் : தொழிநுட்பத்தின் அதி உச்சம்

Share

மனிதர்களை குளிப்பாட்டும் புதிய இயந்திரம் : தொழிநுட்பத்தின் அதி உச்சம்

ஜப்பானில் மனிதர்களை குளிப்பாட்டும் புதிய இயந்திரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதிக வேலைப்பளு அல்லது சோர்வினால் குளிக்க தாமதமாகும் நேரத்தில், ஜப்பானின் புதிய Human Washing Machine ஒரே தீர்வாக அமையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இயந்திரம் ஆடைகளை போலவே மனிதர்களையும் 15 நிமிடத்தில் குளிப்பாட்டி உலர்த்திவிடும்.

ஜப்பானின் Science Co, நிறுவனம் உருவாக்கிய இந்த இயந்திரம், குளிக்க நேரமில்லாதவர்களுக்கு பெரும் சுலபமாக இருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதில் ஒருவர் அமர்ந்தவுடன், செயற்கை நுண்ணறிவு (AI) அவர்களின் தோல் மற்றும் உடலின் தன்மையை அடிப்படையாகக் கொண்டு தண்ணீரின் வெப்பநிலையும், சுத்தப்படுத்தும் முறைகளையும் சரிசெய்யும்.

1970 ஆம் ஆண்டில் ஜப்பானின் World Sanyo Electric Co, நிறுவனம் தற்போது Panansonic என பிரபலமாக அறியப்படுவதுடன் உருவாக்கிய பழைய வடிவமைப்பின் மேம்பட்ட பதிப்பாக இந்த இயந்திரம் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...