20 3
இலங்கைசெய்திகள்

2024 பொதுத் தேர்தல்: அநுர தரப்பிலிருந்து களமிறங்கவுள்ள புதிய முகங்கள்

Share

2024 பொதுத் தேர்தல்: அநுர தரப்பிலிருந்து களமிறங்கவுள்ள புதிய முகங்கள்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் பொறியியலாளர்கள், வைத்தியர்கள், சட்டத்தரணிகள், வர்த்தகர்கள், கலைஞர்கள், மாணவர் தலைவர்கள், விவசாயத் தலைவர்கள் எனப் பல புதிய முகங்களை முன்வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று உறுப்பினரும் முன்னாள் தென் மாகாண சபை உறுப்பினருமான நளின் ஹேவகே (Nalin Hewage) தெரிவித்துள்ளார்.

இவர்கள் நீண்டகாலமாக அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டாலும் பொது அரங்கிற்கு வராதவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

1948ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கையின் அரசியல் வரலாற்றில் தந்தை, மகன்கள் இல்லாத, செல்வந்த குடும்பம் மற்றும் கடத்தல்காரர்கள் இல்லாத மிகவும் புத்திசாலித்தனமான குழுவிற்கு போட்டியிட தேசிய மக்கள் சக்தி வேட்புமனுக்களை வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் நளின் ஹேவகே சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்காளர்களுக்கு நாடாளுமன்றத்தை சுத்தப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள் விருப்பு வாக்குகள் இன்றி ஒரே குழுவாக தேர்தலில் போட்டியிடுவார்கள் எனவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
images 6 4
இலங்கைசெய்திகள்

சந்திரிக்காவின் நன்கொடை பாராட்டுக்குரியது: எதிர்க்கட்சிகளின் அரசியல் வங்குரோத்து குறித்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க விமர்சனம்!

ஊழலற்ற அரச நிர்வாகத்தை அமுல்படுத்தியுள்ளதால் தான் உலக நாடுகள் அனைத்தும் ஜனாதிபதி மீது நம்பிக்கை கொண்டு...

25 6939a0f597196
இலங்கைசெய்திகள்

சூறாவளியால் இலங்கைக் கரையோரப் பகுதி 143 கி.மீ மாசு: குப்பைகளை அகற்ற 3 வாரங்கள் ஆகும்!

‘திட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக, இலங்கையின் கரையோரப் பகுதியில் 143 கிலோ மீற்றர்...

25 6939a5588b95b
இலங்கைசெய்திகள்

மூன்றாம் தவணையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறைமை இல்லை: பரீட்சைகள் இரத்து!

இந்த ஆண்டு மூன்றாம் தவணை முடிவில் பாடசாலை மாணவர்களுக்கு எந்த விதத்திலும் மதிப்பெண் வழங்கும் முறைமை...

images 5 4
இந்தியாசெய்திகள்

13 வருடங்களுக்குப் பிறகு தீர்ப்பு: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனுக்கு 3 ஆண்டுகள் சிறை!

தமிழகத்தின் தூத்துக்குடியில் 2012ஆம் ஆண்டு சிறுமி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், இளைஞர் ஒருவருக்கு...