24 6637173691264
இலங்கைசெய்திகள்

கடனை செலுத்த முடியாமல் திண்டாடும் அரசு

Share

கடனை செலுத்த முடியாமல் திண்டாடும் அரசு

பழைய கடன் மற்றும் வட்டியை செலுத்துவதற்கு அரசாங்கம் புதிய கடன்களை பெற வேண்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் சமீபத்திய வருடாந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

வரி வருமானத்தை அதிகரித்து பொருளாதாரத்தை பலப்படுத்தும் முயற்சியை அரசாங்கம் முன்னெடுத்திருந்தாலும், கடனை செலுத்துவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த நிதியாண்டில் அரசாங்கத்தின் பழைய கடனுக்கான வட்டியை செலுத்துவதற்காக 2455 பில்லியன் ரூபாய் தேவைப்பட்டதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அந்தக் கடன்களைத் தீர்ப்பதற்கு பணம் இல்லாத காரணத்தினால் 2282.3 பில்லியன் ரூபா புதிய கடனாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மூலங்களிலிருந்து பெறப்பட்டுள்ளது.

அதற்கமைய, 1787 பில்லியன் ரூபா உள்நாட்டுக் கடனாகவும் 494 பில்லியன் ரூபா வெளிநாட்டுக் கடனாகவும் பெறப்பட்டுள்ளது.

எனினும், அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கையின் கீழ், மாநில வரி வருவாய் 55.4 சதவீதம் அதிகரித்து 2720 பில்லியன் ரூபாவாக உள்ளது.

மேலும், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக பொதுக் கடன் அளவு 114 சதவீதத்திலிருந்து 103 சதவீதமாகக் குறைந்துள்ளது.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....