24 6637173691264
இலங்கைசெய்திகள்

கடனை செலுத்த முடியாமல் திண்டாடும் அரசு

Share

கடனை செலுத்த முடியாமல் திண்டாடும் அரசு

பழைய கடன் மற்றும் வட்டியை செலுத்துவதற்கு அரசாங்கம் புதிய கடன்களை பெற வேண்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் சமீபத்திய வருடாந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

வரி வருமானத்தை அதிகரித்து பொருளாதாரத்தை பலப்படுத்தும் முயற்சியை அரசாங்கம் முன்னெடுத்திருந்தாலும், கடனை செலுத்துவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த நிதியாண்டில் அரசாங்கத்தின் பழைய கடனுக்கான வட்டியை செலுத்துவதற்காக 2455 பில்லியன் ரூபாய் தேவைப்பட்டதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அந்தக் கடன்களைத் தீர்ப்பதற்கு பணம் இல்லாத காரணத்தினால் 2282.3 பில்லியன் ரூபா புதிய கடனாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மூலங்களிலிருந்து பெறப்பட்டுள்ளது.

அதற்கமைய, 1787 பில்லியன் ரூபா உள்நாட்டுக் கடனாகவும் 494 பில்லியன் ரூபா வெளிநாட்டுக் கடனாகவும் பெறப்பட்டுள்ளது.

எனினும், அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கையின் கீழ், மாநில வரி வருவாய் 55.4 சதவீதம் அதிகரித்து 2720 பில்லியன் ரூபாவாக உள்ளது.

மேலும், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக பொதுக் கடன் அளவு 114 சதவீதத்திலிருந்து 103 சதவீதமாகக் குறைந்துள்ளது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...