24 6637173691264
இலங்கைசெய்திகள்

கடனை செலுத்த முடியாமல் திண்டாடும் அரசு

Share

கடனை செலுத்த முடியாமல் திண்டாடும் அரசு

பழைய கடன் மற்றும் வட்டியை செலுத்துவதற்கு அரசாங்கம் புதிய கடன்களை பெற வேண்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் சமீபத்திய வருடாந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

வரி வருமானத்தை அதிகரித்து பொருளாதாரத்தை பலப்படுத்தும் முயற்சியை அரசாங்கம் முன்னெடுத்திருந்தாலும், கடனை செலுத்துவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த நிதியாண்டில் அரசாங்கத்தின் பழைய கடனுக்கான வட்டியை செலுத்துவதற்காக 2455 பில்லியன் ரூபாய் தேவைப்பட்டதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அந்தக் கடன்களைத் தீர்ப்பதற்கு பணம் இல்லாத காரணத்தினால் 2282.3 பில்லியன் ரூபா புதிய கடனாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மூலங்களிலிருந்து பெறப்பட்டுள்ளது.

அதற்கமைய, 1787 பில்லியன் ரூபா உள்நாட்டுக் கடனாகவும் 494 பில்லியன் ரூபா வெளிநாட்டுக் கடனாகவும் பெறப்பட்டுள்ளது.

எனினும், அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கையின் கீழ், மாநில வரி வருவாய் 55.4 சதவீதம் அதிகரித்து 2720 பில்லியன் ரூபாவாக உள்ளது.

மேலும், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக பொதுக் கடன் அளவு 114 சதவீதத்திலிருந்து 103 சதவீதமாகக் குறைந்துள்ளது.

Share
தொடர்புடையது
15 19
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சாம் கரனுக்குப் பதிலாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தசுன் ஷானக்க!

2026-ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் சில நாட்களே...

14 19
செய்திகள்இந்தியா

புதுச்சேரி தேர்தல்: த.வெ.க வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு? அரசியல் களத்தில் பரபரப்பு!

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க)...

13 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலை உயர்வு: வெதுப்பகப் பொருட்களின் விலை அதிகரிப்பு குறித்து நாளை தீர்மானம்!

இலங்கையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பினால் ஏற்பட்டுள்ள சவால்களைக் கருத்திற்கொண்டு, பாண் உள்ளிட்ட வெதுப்பக...

12 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறி விலைகள் உயர்வு: சில வகைகளுக்கு அதிக கேள்வி!

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (மார்ச் 22, 2026) மரக்கறிகளின் விலைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள்...