rtjy 16 scaled
இலங்கைசெய்திகள்

தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் புதிய அரசியலமைப்பு

Share

தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் புதிய அரசியலமைப்பு

தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் புதியதொரு அரசியலமைப்பு நிச்சயம் இயற்றப்படும் எனவும் அனைத்து இன மக்களும் ஐக்கியமாக வாழக்கூடிய யுகம் உருவாக்கப்படும் தேசிய மக்கள் சக்தியின் தலைவரான அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அத்திவாரமும் உடைந்து விழுந்த நாட்டில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எனவே, எமது ஆட்சியின் கீழ் இந்த அத்திவாரம் நிச்சயம் கட்டியெழுப்படும்.

பலமானதொரு வெளிவிவகாரக் கொள்கை
புதிய அரசியலமைப்பு, சட்டத்தின் ஆட்சி, ஊழல், மோசடியற்ற ஆட்சி, சிறந்த அரச சேவை, இன ஐக்கியம், ஏற்புடைய வெளிவிவகாரக் கொள்கை ஆகியவற்றின் ஊடாக இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.

இன்றைய நவீன உலகில் தொழில்நுட்பம், வர்த்தகத்தால் உலகம் இணைந்துள்ளது. எனவே, தனித்துச் செயற்படும் வெளிவிவகாரக் கொள்கை இனியும் ஏற்புடையதாக அமையாது. எனவே, பலமானதொரு வெளிவிவகாரக் கொள்கை உருவாக்கப்படும்.

வளங்களை விற்று தரப்புகளை திருப்திப்படுத்தும் கொள்கையாக அது அமையாது. ஊழல், மோசடியற்ற அரச சேவையை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

அனைத்து இன மக்களினதும் நீதியான உரிமைகளை உறுதிப்படுத்தக்கூடிய அரசியலமைப்பொன்று வேண்டும் எனவும் மக்கள் கோருகின்றனர். எனவே, மக்களின் எதிர்பார்ப்புகள் நிச்சயம் நிறைவேற்றப்படும்.எமது எதிர்ப்பார்ப்பும் இதுவே.

மேற்கூறப்பட்ட நடவடிக்கைகள் ஊடாக அத்திவாரத்தை ஏற்படுத்திய பின்னர் பொருளாதாரக் கொள்கை, சுகாதாரக்கொள்கை பற்றிப் பேசலாம்.

அதேவேளை, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை தோல்வி கண்ட பொறிமுறையாக உள்ளது.” என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....