இலங்கை (Sri Lanka) விமானப்படையின் புதிய தளபதியாக ஏர் வைஸ் மார்ஷல் வாசு பந்து எதிரிசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நியமனம் ஜனவரி 29 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ச, எதிர்வரும் 29 ஆம் திகதி பதவியில் இருந்து ஓய்வு பெறவுள்ளார்.
சேவை நீட்டிப்பில் உள்ள உதேனி ராஜபக்ச, இலங்கை விமானப்படையின் 19 வது தளபதி ஆவார்.
மேலும், இலங்கையின் தேசிய கல்வி நிறுவன சபைக்கு (National Educational Institutions Council) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.