20 17
இலங்கைசெய்திகள்

அறிமுகமாகும் புதிய மதுபான வகை

Share

அறிமுகமாகும் புதிய மதுபான வகை

சட்டவிரோத மதுபானங்களுக்கு அடிமையானவர்களுக்காக மதுபான வகையொன்று அடுத்த வருடம் முதல் தயாரிக்கப்படவுள்ளதாக மதுவரித் திணைக்களத்தின் (Excise Department of Sri Lanka) ஆணையாளர் நாயகம் உதயகுமார பெரேரா (Udayakumara Perera) தெரிவித்துள்ளார்.

கொழும்பில் (Colombo) நேற்றையதினம் (18.12.2024) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், மதுவரித் திணைக்களத்தின் இந்த வருடத்துக்கான வருமான இலக்கில் இதுவரையில் 210 மில்லியன் ரூபாய் ஈட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சட்டவிரோத மதுபான உற்பத்தி காரணமாக மதுவரித் திணைக்களத்துக்கு வருடாந்தம் 30 வீதமான வருமான இழப்பு ஏற்படுகின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தடுக்கும் வகையிலும் பொதுமக்களை சட்டவிரோத மதுபான பாவனையில் இருந்து மீட்பதற்கும் குறைந்த விலையில் மதுபான வகையொன்றை அறிமுகப்படுத்த மதுவரித் திணைக்களம் தீர்மாணித்துள்ளது.

தற்போதைக்கு இது தொடர்பான கலந்துரையாடல்கள் நிதியமைச்சுடன் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை 2024ஆம் ஆண்டுக்கான மதுவரித் திணைக்களத்தின் வருமான இலக்காக 232 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
images 18
செய்திகள்இலங்கை

சீரற்ற வானிலை: தடைப்பட்ட நீர் விநியோகம் இரண்டு நாட்களுக்குள் சீரமைக்கப்படும் – தேசிய நீர் வழங்கல் சபை!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாகப் பல மாவட்டங்களில் தடைப்பட்டுள்ள நீர்...

images 17
செய்திகள்இலங்கை

வெள்ளத்தில் அகப்பட்டு நீர்கொழும்பில் இருவர் உயிரிழப்பு

நாட்டைத் தாக்கிய பாரிய பேரழிவின் காரணமாக நீர்கொழும்பு பிரதேச செயலகப் பிரிவில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்....

25 692d73f8ae775
செய்திகள்இலங்கை

முத்தயன்கட்டு வெள்ளத்தில் சிக்கிய ஏழு விவசாயிகளும் சிறுவனும் பத்திரமாக மீட்பு: கடற்றொழிலாளர்கள் குழு மனிதாபிமான உதவி!

முல்லைத்தீவு முத்தயன்கட்டு நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கின் காரணமாக விவசாய நிலங்களில்...

images 16
செய்திகள்இலங்கை

சாரதி அனுமதிப் பத்திரங்களைப் புதுப்பிக்கச் சலுகை: டிசம்பர் 25 வரை காலாவதியான உரிமங்களுடன் வாகனம் ஓட்டச் சட்டத் தடைகள் இல்லை!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் இயற்கை அனர்த்த நிலைமைகள் காரணமாக, சாரதி அனுமதிப் பத்திரங்களைப்...