tamilni 442 scaled
இலங்கைசெய்திகள்

ரணிலுக்கு ஆதரவாக களமிறங்கிய புதிய கூட்டணி

Share

ரணிலுக்கு ஆதரவாக களமிறங்கிய புதிய கூட்டணி

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ‘புதிய கூட்டணி’ ஆதரவளிக்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சாவினால் ஸ்தாபிக்கப்பட்ட ‘நியூ அலையன்ஸ்’ என்ற புதிய கூட்டமைப்பு அதன் ஆரம்ப பொது பேரணியை நடத்தியது.

இந்த ஆரம்ப பேரணி ஜா-எலவில் நேற்று(27.01.2024) நடைபெற்றது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

தொடர்ந்து உரையாற்றுகையில், நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிக உறுப்பினர்களைக் கொண்ட அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து புதிய கூட்டணியை உருவாக்கி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ‘புதிய கூட்டணி’ ஆதரவளிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த கூட்டமைப்பின் செயற்பாட்டுத் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்சன யாப்பா செயற்படுகின்றார்.

இந்த ஆரம்ப பேரணியில் அமைச்சர்களான நளின் பெர்னாண்டோ,சுசில் பிரேமஜயந்த மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கர ஜயரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.

Share
தொடர்புடையது
MediaFile 7 1
உலகம்செய்திகள்

வடக்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இவாட் கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை – ஒரு மீற்றர் அலைகள் உருவாகலாம்!

வடக்கு ஜப்பானின் கடற்பரப்பில் இன்று (நவம்பர் 9) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு...

MediaFile 6 1
இலங்கை

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் தந்தைக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அஞ்சலி!

இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், இரா.சாணக்கியனின் தந்தையின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர...

1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...