24 6641ece65e92d
இலங்கைசெய்திகள்

பிரிக்ஸ் அமைப்புடன் இலங்கை இணைவதை எதிர்க்கும் அண்டை நாடு

Share

பிரிக்ஸ் அமைப்புடன் இலங்கை இணைவதை எதிர்க்கும் அண்டை நாடு

பிரிக்ஸ் அமைப்புடன் இலங்கை இணைவதை சீர்குலைக்கும் வகையிலான நடவடிக்கையில் பலம் பொருந்திய அண்டை நாடு ஒன்று ஈடுபட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இலங்கை வெளிவிவகார அமைச்சின் (Ministry of Foreign Affairs) தரப்பு இந்த விடயம் தொடர்பில் செய்தி ஒன்றில் தெரிவித்துள்ளது.

குறித்த செய்தியில் மேலும்,

“பிரிக்ஸ் அமைப்பின் (BRICS) ஸ்தாபக உறுப்பினராகக் கூறப்படும் பலம் வாய்ந்த அண்டை நாடே செல்வாக்குமிக்க இந்த பொருளாதாரக் கூட்டமைப்பில் அங்கத்துவம் பெறுவதற்கான இலங்கையின் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

இலங்கை பிரிக்ஸ் அமைப்புடன் இணைவதற்காக மேற்கொண்ட முயற்சிகளுக்கு இந்த அண்டை நாட்டிலிருந்து குறிப்பிடத்தக்க எதிர்ப்பு காட்டப்பட்டுள்ளது.

மேலும், பிரிக்ஸ் அமைப்பில் இலங்கையின் நுழைவை முறியடிக்க தீவிரமாக பரப்புரை செய்து வருவதுடன், முன்னதாக ஆசியான் அமைப்பில் இணைவதற்கான இலங்கையின் முயற்சிக்கும் இந்த நாடு எதிர்ப்பை காட்டியது.

அதேவேளை, இலங்கை பிரிக்ஸ் அமைப்பில் இணைவதைத் தடுப்பதற்கு பல்வேறு நியாயங்களைப் பயன்படுத்தி குறித்த நாட்டினால் இந்த எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரேசில் (Brazil), ரஸ்யா (Russia), இந்தியா (India), சீனா (China) மற்றும் தென்னாப்பிரிக்காவை (South Africa) உள்ளடக்கிய பிரிக்ஸ் கூட்டமைப்பு, இந்த ஆண்டின் தொடக்கத்தில் எத்தியோப்பியா, ஈரான், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு ராச்சியம் ஆகியவற்றையும் உள்ளீர்த்து, கூட்டமைப்பின் உறுப்பினர்களை விரிவுபடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
image 1000x1000 3 1
செய்திகள்இலங்கை

பாடசாலை செல்லாத கோபம்: மாணவியைத் தாக்கிய அதிபர் மீது காவல்துறை விசாரணை

ஒரு நாள் பாடசாலைக்குச் செல்லாததால் ஏற்பட்ட கோபத்தில், மாணவி ஒருவரைத் தடியால் தாக்கியதாகக் கூறப்படும் அதிபர்...

image 1000x1000 2
செய்திகள்இலங்கை

கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்திக்கு ஊடகங்கள் அளித்த முக்கியத்துவம் – பேராசிரியர் கடும் விமர்சனம்

நேபாளத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ படுகொலையின் முக்கிய சூத்திரதாரியான இஷாரா...

image 1000x1000 1
செய்திகள்இலங்கை

கோர விபத்து: அநுராதபுரத்தில் யாழ் பெண் உட்பட இருவர் பலி, 8 பேர் காயம்

அநுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணத்தின்...

image 1200x630 4
செய்திகள்இலங்கை

மன்னாரில் பற்றியெரியும் குப்பைமேடு : மக்கள் கடும் பாதிப்பு

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,மன்னார் பொது மயானத்திற்கு பின் பகுதியில் மன்னார் நகர சபையினால் கொட்டப்பட்டு குவிக்கப்பட்ட...