நடிகர் மகேந்திரன் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து அதன் பின் தற்போது குணச்சித்திர ரோல்களில் நடித்து வருகிறார்.
இன்றைய நீயா நானா எபிசோடில் சினிமா விமர்சகர்கள் vs நடிகர்கள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. அதில் மகேந்திரனும் கலந்துகொண்டார்.
“நான் ஒரு படத்தில் கெட்ட வார்த்தை அதிகம் பேசி நடித்ததை ஒரு விமர்சகர் விமர்சித்தார், நான் கெட்ட வார்த்தை பேசுவதை பெண்கள் கூட ஏற்றுக்கொண்டனர்” என மகேந்திரன் பேசினார்.
கெட்ட வார்த்தை பேசுவதில் என்ன பெருமை, அதை நீங்கள் glorify செய்கிறீர்கள் என அவருக்கு எதிர்ப்பு வருகிறது.