23 653a1a1a78b85
இலங்கைசெய்திகள்

யாழில் CID அதிகாரிகளை பின்தொடர்ந்த கடற்படை புலனாய்வுப் பிரிவு – உண்மைகளை கண்டுபிடிக்க தடங்கல்

Share

கடற்படை குழுவினரால் காணாமல் ஆக்கப்பட்ட நபர்கள் குறித்து விசாரிக்க சென்ற குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகளை கடற்படை புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர்கள் பின்தொடர்ந்துள்ளனர்.

இது தொடர்பில் குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரத்தை விசாரிக்க பருத்தித்துறைக்கு விசாரணை அதிகாரிகள் சென்றபோது, இரண்டு மோட்டார் சைக்கிள்களில் நான்கு பேர் அவர்களை பின்தொடர்ந்துள்ளனர்.

விசாரணையில் அவர்கள் கடற்படை புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் என்பது உறுதி செய்யப்பட்டதாகவும் குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

புலனாய்வு அதிகாரிகளிடம் விசாரித்தபோது, கடற்படை புலனாய்வுப் பிரிவின் லெப்டினன்ட் கொமாண்டர் ஒருவரால் அவர்களை பின்தொடர்வதற்கான உத்தரவு வழங்கப்பட்டதாக குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

Share
தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...