cockroach caye
இலங்கைசெய்திகள்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு: கரையோர மற்றும் சமுத்திரச் சூழலில் இயற்கை மூலதனப் பெறுமதி திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Share

இலங்கையின் கரையோர மற்றும் சமுத்திரச் சுற்றாடல் தொகுதிகளில் இயற்கை மூலதனப் பெறுமதி (Natural Capital Valuation) மற்றும் அதனைப் பேண்தகு அபிவிருத்தித் திட்டங்களுடன் ஒருங்கிணைத்தல் கருத்திட்டத்தை அமுல்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

2025.12.10 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் குறித்து அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் வியாழக்கிழமை (டிசம்பர் 11) இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக ஆர்வம் காட்டுகின்ற பல நாடுகள் இயற்கை மூலதனப் பெறுமதியை மதிப்பீடு செய்தல் மற்றும் கணக்கிடலை மேற்கொண்டாலும், இலங்கையில் இதுவரையில் சரியான வகையிலும் போதுமான அளவிலும் இந்தக் கணக்கீடு மேற்கொள்ளப்படவில்லை.

இந்த நிலையை மேம்படுத்தும் நோக்கில், ‘இலங்கையின் கரையோர மற்றும் சமுத்திரச் சுற்றாடல் தொகுதிகளில் இயற்கை மூலதனப் பெறுமதி பேண்தகு அபிவிருத்தித் திட்டம் மற்றும் ஒருங்கிணைத்தல்’ என்ற கருத்திட்ட முன்மொழிவு தயாரிக்கப்பட்டது.

இந்தக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக உலகளாவிய சுற்றாடல் வசதி இன் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்தக் கருத்திட்டம் இயற்கையைப் பாதுகாப்பதற்கான சர்வதேச சங்கம் (IUCN) மற்றும் சுற்றாடல் அமைச்சு ஏனைய பங்காளர்களுடைய ஒத்துழைப்புக்களுடன் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

குறித்த கருத்திட்டத்தின் செயற்பாடுகள் காலி, மன்னார், புத்தளம் மற்றும் திருகோணமலை போன்ற மாவட்டங்களில் அடையாளங் காணப்பட்ட கரையோரப் பிரதேசங்களில் நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்காக 2.66 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவி கிடைக்கப் பெறவுள்ளது.

உலகளாவிய சுற்றாடல் வசதியால் வழங்கப்படும் நிதியைப் பயன்படுத்தி குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும், அதற்கான உடன்பாட்டு ஒப்பந்தத்தில் சுற்றாடல் அமைச்சு மற்றும் இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச சங்கம் (IUCN) ஆகியவற்றுக்கு இடையிலான ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கும் சுற்றாடல் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Share
தொடர்புடையது
articles2FVCJGuEkoPbB9Y2NvQE6p
உலகம்செய்திகள்

பெலாரஸ் பலூன்களால் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்: லித்துவேனியா அவசரநிலை அறிவிப்பு!

பெலாரஸ் நாட்டிலிருந்து வரும் பலூன்களால் ஏற்படும் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக லித்துவேனியா நாடு தழுவிய...

25 69388f5211389
உலகம்செய்திகள்

ஜப்பானின் அமோரி மாகாணக் கடற்கரையில் 6.7 ரிக்டர் நிலநடுக்கம்!!

ஜப்பானின் அமோரி (Aomori) மாகாணத்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் இன்று (டிசம்பர் 12) காலை சக்திவாய்ந்த...

d8a6a670 6a8c 11ee 883d 61bb9e676cae
உலகம்செய்திகள்

மருத்துவமனை மீது இராணுவம் தாக்குதல்; 34 பேர் பலி – ஐ.நா. கண்டனம்!

மியன்மாரில் ஆளும் இராணுவத்துக்கும், கிளர்ச்சிக் குழுக்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், கிளர்ச்சியாளர்களின்...

1700821783 police officer arrested l
இலங்கைசெய்திகள்

ரூ. 5,000 லஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜென்ட், கொன்ஸ்டபிள் கைது!

அத்தனகடவல பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் நேற்று (டிசம்பர் 11) காலை லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் ஒரு...