tamilnid 20 scaled
இலங்கைசெய்திகள்

நாடளாவிய ரீதியில் பொலிஸாரின் கைது நடவடிக்கை : டிரன் அலஸ் தகவல்

Share

நாடளாவிய ரீதியில் பொலிஸாரின் கைது நடவடிக்கை : டிரன் அலஸ் தகவல்

நாடளாவிய ரீதியில் பாதாள உலக செயற்பாடுகளில் ஈடுபட்ட 1,091 பேரை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் தெரிவித்துள்ளார்.

இவர்களில் சுமார் 135 பேர் சிறையில் இருந்து கொண்டே குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளதாகவும், இந்த தகவல் அந்தந்த பொலிஸ் நிலையங்களுக்கு பொறுப்பான அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வரலாற்றில் முதல் தடவையாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புகைப்படக்கருவி அமைப்பை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

நாட்டை விட்டு தப்பிச்செல்ல முயற்சிக்கும் தேடப்படும் குற்றவாளிகளின் கண்காணிப்பை மேம்படுத்துவதை நோக்கமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், புலனாய்வுப்பிரிவினரும், பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரும் இணைந்து இலங்கை முழுவதும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளவர்களின் பட்டியலை தொகுத்துள்ளனர்.

இந்த முயற்சிகளின் மூலம் கைது செய்யப்பட்ட ஏராளமானவர்கள் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் அலஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
images 11
இலங்கைஅரசியல்செய்திகள்

தையிட்டி விகாரையைச் சூழவுள்ள காணிகளை கட்டம் கட்டமாக விடுவிக்க இணக்கம்: காணி உரிமையாளர்கள் தகவல்!

யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அமைந்திருக்கும் நிலப்பரப்பு தவிர்ந்த, அதனைச் சூழவுள்ள பொதுமக்களின் ஏனைய காணிகளைக் கட்டம்...

14 11
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பலந்தோட்டையில் கொடூரம்: பொலிஸார் மீது காரை மோதித் தள்ளிய கும்பல் – கான்ஸ்டபிள் பலி!

அம்பலந்தோட்டையில் இன்று அதிகாலை போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் மீது கார் ஒன்று மோதியதில்...

25 691805cfda215
இலங்கைஉலகம்

உலகை அச்சுறுத்தும் பாபா வாங்காவின் 2026 கணிப்புகள்: 3-ம் உலகப்போர் மற்றும் பொருளாதார வீழ்ச்சி!

எதிர்காலத்தைக் கணிப்பதில் உலகப் புகழ்பெற்றவரான பாபா வங்கா (Baba Vanga), 2026 ஆம் ஆண்டு மனிதகுலத்திற்குப்...

MediaFile 4 5
செய்திகள்அரசியல்இலங்கை

மத்துகம பிரதேச சபை தவிசாளர் சரணடைவு: நீதிமன்றினால் பிணை வழங்கப்பட்டது!

மத்துகம பிரதேச சபை செயலாளரைத் தாக்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்த அந்த சபையின் தவிசாளர் கசுன் முனசிங்க,...