5 49
இலங்கைசெய்திகள்

மகிந்த மீது ஆளில்லா விமான தாக்குதல் : பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் வெளியிட்ட தகவல்

Share

மகிந்த மீது ஆளில்லா விமான தாக்குதல் : பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் வெளியிட்ட தகவல்

அரச புலனாய்வுத் தகவல்களின்படி, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) மீது ஆளில்லா விமானம் தாக்கும் அபாயம் இல்லை என பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல (Sunil Watagala) தெரிவித்துள்ளார்.

அத்துடன் இது தொடர்பான பாதுகாப்பு நிலைமைகளில் தேவையான மாற்றங்களை மேற்கொள்ள வாய்ப்பு உள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று (26) தென்னிலங்கை தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ஆளில்லா விமான தாக்குதல் ஒன்று நடத்த திட்டமிட்டுள்ளதாக மனோஜ் கமகே (Manoj Gamage) கூறியிருந்தார். இப்போது அவரை விசாரிக்க காவல்துறை மா அதிபர் தயாராக உள்ளார்.

ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தப்பட்டாலும், அந்த ஆளில்லா விமானத் தாக்குதலை எதிர்கொள்ள, மகிந்தவைச் சுற்றியுள்ளவர்கள் போதாது. T56 அந்த ஆளில்லா விமானத் தாக்குதலுக்கு ஏற்றதல்ல.

மனோஜ் கமகே எதையாவது சொல்லும் போது கவனமாக சொல்லுங்கள், மக்களை திசை திருப்பாதீர்கள், எங்கள் உளவுத்துறைக்குள் ட்ரோன் தாக்குதல் எதுவும் இல்லை. அது எங்கிருந்து வருகிறது என்பதை அவர் சொல்ல வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட மதிப்பீட்டிற்குள் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. அவ்வாறு இல்லை என்றால், நாங்கள் மறுபரிசீலனை செய்வோம். நான் பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர், நானும் இன்று தனியாகத் தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன்.” என தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...