5 49
இலங்கைசெய்திகள்

மகிந்த மீது ஆளில்லா விமான தாக்குதல் : பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் வெளியிட்ட தகவல்

Share

மகிந்த மீது ஆளில்லா விமான தாக்குதல் : பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் வெளியிட்ட தகவல்

அரச புலனாய்வுத் தகவல்களின்படி, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) மீது ஆளில்லா விமானம் தாக்கும் அபாயம் இல்லை என பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல (Sunil Watagala) தெரிவித்துள்ளார்.

அத்துடன் இது தொடர்பான பாதுகாப்பு நிலைமைகளில் தேவையான மாற்றங்களை மேற்கொள்ள வாய்ப்பு உள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று (26) தென்னிலங்கை தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ஆளில்லா விமான தாக்குதல் ஒன்று நடத்த திட்டமிட்டுள்ளதாக மனோஜ் கமகே (Manoj Gamage) கூறியிருந்தார். இப்போது அவரை விசாரிக்க காவல்துறை மா அதிபர் தயாராக உள்ளார்.

ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தப்பட்டாலும், அந்த ஆளில்லா விமானத் தாக்குதலை எதிர்கொள்ள, மகிந்தவைச் சுற்றியுள்ளவர்கள் போதாது. T56 அந்த ஆளில்லா விமானத் தாக்குதலுக்கு ஏற்றதல்ல.

மனோஜ் கமகே எதையாவது சொல்லும் போது கவனமாக சொல்லுங்கள், மக்களை திசை திருப்பாதீர்கள், எங்கள் உளவுத்துறைக்குள் ட்ரோன் தாக்குதல் எதுவும் இல்லை. அது எங்கிருந்து வருகிறது என்பதை அவர் சொல்ல வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட மதிப்பீட்டிற்குள் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. அவ்வாறு இல்லை என்றால், நாங்கள் மறுபரிசீலனை செய்வோம். நான் பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர், நானும் இன்று தனியாகத் தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன்.” என தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
24 11
செய்திகள்அரசியல்இலங்கை

கே.பி.யின் கைது மற்றும் மகிந்த-கோட்டாபயவின் டீல்: சரத் பொன்சேகாவின் பகிரங்க விமர்சனம்!

விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் குமரன் பத்மநாதன் (கே.பி.) கைது விவகாரம் மற்றும் அது தொடர்பான...

23 9
செய்திகள்உலகம்

நெதன்யாகுவைக் துரத்திச் சென்று அழிப்போம்: தீவிரமடையும் போர் பதற்றம்

மத்திய கிழக்கில் போர்ச் சூழல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைக் கொல்வோம்...

22 12
செய்திகள்உலகம்

ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி ஆரோக்கியமாக உள்ளார்: வெளியுறவு அமைச்சர் தகவல்

ஈரானின் புதிய உச்ச தலைவராக கடந்த மார்ச் 8ஆம் திகதி பதவியேற்ற மொஜ்தபா கமேனி, பதவியேற்பிற்குப்...

21 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிர்வாணக் காணொளி பரப்பியது தொடர்பாக இரு பல்கலைக்கழக மாணவர்கள் கைது!

இளம் பெண்ணின் நிர்வாணக் காணொளியைத் தங்களுக்குள் வாட்ஸ்அப் (WhatsApp) செயலி மூலம் பகிர்ந்து கொண்டமை மற்றும்...