5 49
இலங்கைசெய்திகள்

மகிந்த மீது ஆளில்லா விமான தாக்குதல் : பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் வெளியிட்ட தகவல்

Share

மகிந்த மீது ஆளில்லா விமான தாக்குதல் : பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் வெளியிட்ட தகவல்

அரச புலனாய்வுத் தகவல்களின்படி, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) மீது ஆளில்லா விமானம் தாக்கும் அபாயம் இல்லை என பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல (Sunil Watagala) தெரிவித்துள்ளார்.

அத்துடன் இது தொடர்பான பாதுகாப்பு நிலைமைகளில் தேவையான மாற்றங்களை மேற்கொள்ள வாய்ப்பு உள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று (26) தென்னிலங்கை தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ஆளில்லா விமான தாக்குதல் ஒன்று நடத்த திட்டமிட்டுள்ளதாக மனோஜ் கமகே (Manoj Gamage) கூறியிருந்தார். இப்போது அவரை விசாரிக்க காவல்துறை மா அதிபர் தயாராக உள்ளார்.

ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தப்பட்டாலும், அந்த ஆளில்லா விமானத் தாக்குதலை எதிர்கொள்ள, மகிந்தவைச் சுற்றியுள்ளவர்கள் போதாது. T56 அந்த ஆளில்லா விமானத் தாக்குதலுக்கு ஏற்றதல்ல.

மனோஜ் கமகே எதையாவது சொல்லும் போது கவனமாக சொல்லுங்கள், மக்களை திசை திருப்பாதீர்கள், எங்கள் உளவுத்துறைக்குள் ட்ரோன் தாக்குதல் எதுவும் இல்லை. அது எங்கிருந்து வருகிறது என்பதை அவர் சொல்ல வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட மதிப்பீட்டிற்குள் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. அவ்வாறு இல்லை என்றால், நாங்கள் மறுபரிசீலனை செய்வோம். நான் பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர், நானும் இன்று தனியாகத் தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன்.” என தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
23858849 newproject 2025 12 28t112541304
செய்திகள்உலகம்

இனி வீட்டு வேலைகளுக்கு ‘ஹுமாயுனோய்டு’ ரோபோக்கள்: சிலிக்கான் வேலியில் தீவிரமடையும் தயாரிப்புப் பணிகள்!

வீட்டின் அனைத்து வேலைகளையும் செய்வதற்கான மனித ரொபோக்களை தயாரிக்கும் பணிகள் அமெரிக்காவின் சிலிக்கன் வெலி தொழில்நுட்ப...

24632725 china
செய்திகள்உலகம்

சீனாவில் களைகட்டிய உலக இந்தி தினம்: ஷாங்காய் இந்தியத் தூதரகத்தில் மாணவர்கள் உற்சாகப் பங்கேற்பு!

உலக இந்தி தினத்தை முன்னிட்டு சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள இந்தியத் தூதரகத்தில் விசேட கொண்டாட்டங்கள்...

kalvi L 260112092401000000
செய்திகள்உலகம்

தட்சசீலத்தில் 2,000 ஆண்டுகள் பழமையான குஷான கால நாணயங்கள் கண்டெடுப்பு: உலகளாவிய வணிக மையம் என்பது உறுதி!

பாகிஸ்தானின் வரலாற்றுச் சிறப்புமிக்க தட்சசீலம் (Taxila) பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில், 2,000 ஆண்டுகள் பழமையான குஷானப்...

26 69631f5fb34d5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தீவிரமடையும் வைரஸ் காய்ச்சல்: கொழும்பில் சிக்குன்குனியா; நாடு முழுவதும் டெங்கு அச்சம்!

இலங்கையில் தற்போது பல்வேறு வகையான வைரஸ் நோய்கள் வேகமாகப் பரவி வருவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனையின்...