24 66598616e4c3d
இலங்கைசெய்திகள்

ஹெப்பி ஹவர்ஸ் என்ற போர்வையில் ஹோட்டல்களின் மோசமான செயல்

Share

ஹெப்பி ஹவர்ஸ் என்ற போர்வையில் ஹோட்டல்களின் மோசமான செயல்

ஹெப்பி ஹவர்ஸ் என்ற போர்வையில் மதுபான பொருட்களுக்கு அளிக்கும் தள்ளுபடியை இலங்கையின் அனைத்து ஹோட்டல்களும் திரும்ப பெற வேண்டும் என புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகார சபை (NATA) தெரிவித்துள்ளது.

அத்துடன், மதுபான பொருட்களுக்கு இவ்வாறான தள்ளுபடிகளை வழங்குவது தண்டனைக்குரிய குற்றம் எனவும் ‘NATA’ கூறியுள்ளது.

இலங்கையில் உள்ள முன்னணி நட்சத்திர ஹோட்டல் ஒன்றுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதத்திலேயே ‘NATA’ இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளது.

குறித்த நட்சத்திர ஹோட்டலில் ‘ஹெப்பி ஹவர்ஸ்’ (Happy Hours) என்ற பெயரில் மதுபான பொருட்களுக்கு தள்ளுபடி வழங்குவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமையவே இந்த எச்சரிக்கைக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இவ்வாறு தள்ளுபடி வழங்குவது, 2006ஆம் ஆண்டின் 27ஆம் இலக்க புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகார சபை சட்டத்தின் 37(2) பிரிவின் படி பாரிய அத்துமீறல் என கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், இதுபோன்ற குற்றத்துக்கு 50,000 ரூபா வரையிலான தண்டப்பணத்தை அறவிட முடியும்.

எனவே, 2006 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க NATA சட்டத்தின் அனைத்து விதிகளுக்கும் இணங்கி செயற்படுமாறு குறித்த ஹோட்டலுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
MediaFile 11
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கிராம அலுவலர் மீதான தாக்குதல் வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் ஆட்பிணையில் விடுதலை!

கிளிநொச்சி – பரந்தன் பகுதி கிராம அலுவலர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் வழக்கில், நாடாளுமன்ற...

images 6 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இயக்கச்சியில் விபத்து: மாற்றுத்திறனாளியை மோதிவிட்டுத் தப்பியோடிய வாகனம் – ஒருவர் படுகாயம்!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி பகுதியில், மாற்றுத்திறனாளி ஒருவரின் மோட்டார் வண்டியைப் பின்னால் இருந்து மோதி...

MediaFile 10 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ராஜகிரியவில் 300 புதிய வீட்டு அலகுகள்: தடைப்பட்டிருந்த திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி!

ராஜகிரிய, ஒபேசேகரபுர பகுதியில் நீண்டகாலமாகத் தடைப்பட்டிருந்த 300 வீட்டு அலகுகளை நிர்மாணிக்கும் பணிகளைப் புதிய ஒப்பந்தக்காரர்...

Dark AI e1756568647595
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தெஹிவளை ஹோட்டல் உரிமையாளர் கொலை: AI தொழில்நுட்பத்தில் உருவான சந்தேக நபரின் புகைப்படம் வெளியீடு!

தெஹிவளை பகுதியில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை அடையாளம்...