24 66598616e4c3d
இலங்கைசெய்திகள்

ஹெப்பி ஹவர்ஸ் என்ற போர்வையில் ஹோட்டல்களின் மோசமான செயல்

Share

ஹெப்பி ஹவர்ஸ் என்ற போர்வையில் ஹோட்டல்களின் மோசமான செயல்

ஹெப்பி ஹவர்ஸ் என்ற போர்வையில் மதுபான பொருட்களுக்கு அளிக்கும் தள்ளுபடியை இலங்கையின் அனைத்து ஹோட்டல்களும் திரும்ப பெற வேண்டும் என புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகார சபை (NATA) தெரிவித்துள்ளது.

அத்துடன், மதுபான பொருட்களுக்கு இவ்வாறான தள்ளுபடிகளை வழங்குவது தண்டனைக்குரிய குற்றம் எனவும் ‘NATA’ கூறியுள்ளது.

இலங்கையில் உள்ள முன்னணி நட்சத்திர ஹோட்டல் ஒன்றுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதத்திலேயே ‘NATA’ இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளது.

குறித்த நட்சத்திர ஹோட்டலில் ‘ஹெப்பி ஹவர்ஸ்’ (Happy Hours) என்ற பெயரில் மதுபான பொருட்களுக்கு தள்ளுபடி வழங்குவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமையவே இந்த எச்சரிக்கைக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இவ்வாறு தள்ளுபடி வழங்குவது, 2006ஆம் ஆண்டின் 27ஆம் இலக்க புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகார சபை சட்டத்தின் 37(2) பிரிவின் படி பாரிய அத்துமீறல் என கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், இதுபோன்ற குற்றத்துக்கு 50,000 ரூபா வரையிலான தண்டப்பணத்தை அறவிட முடியும்.

எனவே, 2006 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க NATA சட்டத்தின் அனைத்து விதிகளுக்கும் இணங்கி செயற்படுமாறு குறித்த ஹோட்டலுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...