tamilnaadi 53 scaled
இலங்கைசெய்திகள்

சுட்டுக்கொல்லப்பட்ட அப்பாவி குடும்பஸ்தர் : பொலிஸாருக்கு அவமானம்

Share

சுட்டுக்கொல்லப்பட்ட அப்பாவி குடும்பஸ்தர் : பொலிஸாருக்கு அவமானம்

குருணாகலில் அப்பாவி குடிமகன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டுச் சம்பவம் பொலிஸ் திணைக்களத்திற்கு பெரும் அவமானம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாரம்மல பிரதேசத்தில் உப பொலிஸ் பரிசோதகரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் லொறி சாரதி ஒருவர் உயிரிழந்தார்.

இந்த செயற்பாடு தனிப்பட்ட ரீதியிலும் திணைக்களமும் எதிர்கொண்ட பாரிய அவமானம் என குருநாகல் மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,

மிகவும் போராடி சம்பாதித்த மக்களின் நம்பிக்கையை ஒரே நொடியில் அழிக்க முடியும் என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் எதுவுமில்லை என அவர் கூறியுள்ளார்.

குற்றஞ்சாட்டப்பட்ட இந்த அதிகாரியின் நடவடிக்கையால் வீதியில் பயணித்த அப்பாவி குடிமகன் ஒருவரின் துரதிர்ஷ்டவசமான மரணம் ஏற்பட்டுள்ளது.

இழப்பீடு அல்லது விலையால் ஈடுகட்ட முடியாத இழப்பு எனவும் ஒரு குடும்பத்திற்கு கணவர் மற்றும் பிள்ளைகளுக்கு தந்தை இல்லாமல் போயுள்ளதென அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சந்தேகத்திற்குரிய இந்த அதிகாரி தொடர்பில் நியாயமானதும் வெளிப்படையானதுமான விசாரணையை நடத்துவதற்கு சாத்தியமான அனைத்து சட்ட மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என சுஜித் வேதமுல்ல உறுதியளித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...