22
அரசியல்இலங்கைசெய்திகள்

கட்சி உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை விடுத்த நாமல்

Share

கட்சி உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை விடுத்த நாமல்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரை நிறுத்துவது தொடர்பான தீர்மானம் ஜூலை நடுப்பகுதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுகிறாரா? அப்படியானால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் எந்த வகையான நிபந்தனைகளுடன் இணைவார் என்பதன் அடிப்படையில் தனது கட்சியில் இருந்து வேட்பாளரை நியமிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் உத்தியோகபூர்வ கருத்து ஊடகப் பேச்சாளர் சஞ்சீவ எதிரிமான்னவினால் மட்டுமே வெளியிடப்படும் என கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ கட்சியின் உள் அமைப்பாளர்களுக்கு அறிவித்துள்ளார்.

கட்சியின் உத்தியோகபூர்வ கருத்து அறிவிக்கப்படும் வரை ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தனிப்பட்ட கருத்துக்களை வெளியிட வேண்டாம் எனவும் அவரால் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், பிரசன்ன ரணதுங்க உள்ளிட்டோர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நிபந்தனையற்ற ஆதரவளிக்க வேண்டும் என ஏற்கனவே பகிரங்கமாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...