rtjy 124 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

ராஜபக்சர்களின் அடுத்தகட்ட திட்டம்: நாமல் வீட்டில் மந்திராலோசனை

Share

ராஜபக்சர்களின் அடுத்தகட்ட திட்டம்: நாமல் வீட்டில் மந்திராலோசனை

அடுத்த ஜனாதிபதி தேர்தலை விட பொதுஜன பெரமுன கட்சியை முன்னோக்கி கொண்டு செல்வதே தனது இலக்கு என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அண்மையில் மலலசேகர மாவத்தையிலுள்ள நாமல் ராஜபக்ஷவின் இல்லத்தில் நடைபெற்ற அரசியல் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் சிலர் கலந்து கொண்டனர்.

இதன்போது பொதுஜன பெரமுனு ஜனாதிபதி வேட்பாளராக தொழிலதிபர் தம்மிக்க பெரேராவின் பெயர் முன்வைக்கப்பட்டமை குறித்து விவாதிக்கப்பட்டது.

தம்மிக பெரேரா ஏன் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு கேட்கிறீர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நமலிடம் கேள்வி எழுப்பியுள்ளார். நாமல் இந்த கேள்வியை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டார்.

“முதலில் கட்சியை உருவாக்க வேண்டும். ஜனாதிபதி தேர்தலுக்கு அல்ல எந்த தேர்தலுக்கும் வருவதற்கு கட்சி தயாராக உள்ளது. ஏனெனில் நான் சவால்களை ஏற்றுக்கொள்ளும் ஒருவர் என நாமல் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்யிட எமது கட்சியின் சார்பில் நான்கு வேட்பாளர்கள் உள்ளனர். நானும் பசில் ராஜபக்ஷவும் விண்ணப்பிக்க தீர்மானித்தால் ஆறு பேர் போட்டியிடுவார்கள் என நாமல் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
p0n6jgg8
செய்திகள்உலகம்

ஈரான் மீதான தாக்குதல்: உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள கடும் பாதிப்புகள்

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்ட கூட்டுத்...

26 69b351d688c88
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத இலத்திரனியல் பொருட்கள் மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை

யாழ்ப்பாணப் பகுதியில் அனுமதி இன்றி சட்டவிரோதமான முறையில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த இலத்திரனியல் பொருட்கள் தொகுதி ஒன்றை...

20 12
செய்திகள்இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: ஆகஸ்ட் மாதம் நிவாரண நிதி திரட்டும் போட்டிகள்!

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு...

19 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!

இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவிய ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில்,...