tamilni 23 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

எந்த ஒரு தேர்தலையும் எதிர்கொள்ள தயார்

Share

எந்த ஒரு தேர்தலையும் எதிர்கொள்ள தயார்

எந்த ஒரு தேர்தலையும் எதிர்கொள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தயாராக உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு கிராம சேவை பிரிவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கிளை ஒன்றை ஸ்தாபிக்கும் நடவடிக்கை நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டது.

நாடு முழுவதிலும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கட்சியின் மறு சீரமைப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி பாராட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

கிராமத்தில் உருவாக்கப்பட்ட மொட்டுக்கட்சி கிராமிய அரசியலை வலுப்படுத்தும் வகையில் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கிளைகள் உருவாக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மக்களை நேசிக்கும் அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொது ஜன முன்னணியின் கொள்கைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Ranil UNP
செய்திகள்அரசியல்இலங்கை

சிறிகொத்தவில் டிஜிட்டல் புரட்சி: ஸ்டார்லிங்க் வசதி மற்றும் UNP செயலியுடன் களமிறங்கும் ஐக்கிய தேசியக் கட்சி!

ஐக்கிய தேசியக் கட்சி (UNP) தனது அரசியல் கட்டமைப்பை நவீன தொழில்நுட்பத்துடன் இணைக்கும் நோக்கில், ஒரு...

Weather Forecast Oct 11 2025
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாட்டின் பல பகுதிகளில் மழை: சில இடங்களில் 50 மி.மீ வரை பலத்த மழை பெய்யக்கூடும்!

நாட்டின் பல மாகாணங்களில் இன்றும் மழை பெய்யக்கூடிய வானிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் முன்னறிவிப்பு விடுத்துள்ளது....

NAMAL
செய்திகள்அரசியல்இலங்கை

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் நாமல் ராஜபக்ச: வாக்குமூலம் அளிக்க நேரில் முன்னிலை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச சற்று முன்னர்...

PSX 20260202 191816
செய்திகள்அரசியல்இலங்கை

எனக்கும் கெஹெல்பத்தர பத்மேவுக்கும் தொடர்பில்லை! – CID விசாரணையில் பிரசன்ன ரணதுங்க விளக்கம்.

திட்டமிட்ட குற்றச்செயல்களை வழிநடத்தியதாகக் கருதப்படும் ‘கெஹெல்பத்தர பத்மே’ தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க...