tamilni 23 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

எந்த ஒரு தேர்தலையும் எதிர்கொள்ள தயார்

Share

எந்த ஒரு தேர்தலையும் எதிர்கொள்ள தயார்

எந்த ஒரு தேர்தலையும் எதிர்கொள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தயாராக உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு கிராம சேவை பிரிவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கிளை ஒன்றை ஸ்தாபிக்கும் நடவடிக்கை நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டது.

நாடு முழுவதிலும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கட்சியின் மறு சீரமைப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி பாராட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

கிராமத்தில் உருவாக்கப்பட்ட மொட்டுக்கட்சி கிராமிய அரசியலை வலுப்படுத்தும் வகையில் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கிளைகள் உருவாக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மக்களை நேசிக்கும் அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொது ஜன முன்னணியின் கொள்கைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
01 31
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹட்டனில் போதை மாத்திரைகளை விற்ற மருந்தக உரிமையாளர் கைது: 1400 மாத்திரைகள் பறிமுதல்!

மருத்துவர்களின் பரிந்துரைச் சீட்டு (Prescription) இல்லாமல், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் பயன்படுத்தப்படும் மருந்துகளை இளைஞர்களுக்குப் போதைக்காக விற்பனை...

01 30
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மசகு எண்ணெய் விலை 150 டொலரை எட்டினால் உலகப் பொருளாதார வீழ்ச்சி: பிளாக்ராக் தலைவர் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய்...

01 29
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிரடி உயர்வு!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடி...

01 28
செய்திகள்உலகம்

அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்தது ஈரான்: “ஒருபோதும் இணங்க முடியாது” என அதிரடி!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்துள்ள யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான யோசனைகளையும் பேச்சுவார்த்தைக்கான அழைப்பையும்...