tamilni 366 scaled
இலங்கைசெய்திகள்

மக்களை தம்வசப்படுத்த நாமல் புதிய திட்டம்

Share

மக்களை தம்வசப்படுத்த நாமல் புதிய திட்டம்

அனைத்து கிராம சேவகர் பிரிவுகளிலும் உள்ள கிராம தலைவர்களை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சந்திக்கவுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தசபல சேனா வேலைத்திட்டத்தின் கீழ் அவர் இந்த நடவடிக்கை எடுத்துள்ளார். மாநகர சபைகள், பிரதேச சபைகள் மற்றும் கிராம மட்டங்களின் தலைவர்கள் அனைவரும் இங்கு கூடுவார்கள் என நாமல் ராஜபக்ஷ கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காக இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

கொழும்பு மாவட்டத்தை மையமாக வைத்து நேற்று மொரட்டுவையில் இருந்து இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதென என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் எந்தவொரு தேர்தலுக்கும் கட்சியை தயார்படுத்துவதும், அடிமட்டத்தில் கட்சியை பலப்படுத்துவதுமே இங்கு நோக்கமாகும் என நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

இதுதவிர பொதுஜன பெரமுன மீது சுமத்தப்பட்டுள்ள பொய்யான குற்றச்சாட்டுகள் மற்றும் உண்மை என்ன என்பது குறித்து கிராம தலைவர்களுக்கு விளக்கமளிக்க தயார் எனவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

மேலும், ஒரு கிராம சேவகர் பிரிவில் இருந்து 10 செயற்பாட்டாளர்கள் தெரிவு செய்யப்பட்டு கட்சியின் பொய்யான அறிக்கைகளுக்கு பதிலளிக்க தயார் எனவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
05 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தனியார் பஸ் சேவைகளை முறைப்படுத்தக் கோரிக்கை: அத்தியாவசியமற்ற நேரங்களில் சேவைகளைக் குறைக்கத் திட்டம்

நாட்டில் நிலவும் சூழலைக் கருத்திற்கொண்டு, தனியார் பஸ்களின் பயண நேரங்களை முறைப்படுத்துமாறும், பயணிகள் வருகை குறைவாக...

02 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிசக்தி சேமிப்பு நடவடிக்கை: ஒவ்வொரு புதன்கிழமையும் பொது விடுமுறையாக அறிவிப்பு

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு,...

01 16
செய்திகள்உலகம்

காபூல் மருத்துவமனை மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்: 400 பேர் உயிரிழப்பு என தலிபான் அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400...

21 13
செய்திகள்இலங்கை

எரிபொருள் QR குறியீட்டிற்கான போலி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை

அரசாங்கத்தின் அதிகாரபூர்வ எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதற்கான இணையதளத்தைப் போன்று போலியாக வடிவமைக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து...