tamilni 366 scaled
இலங்கைசெய்திகள்

மக்களை தம்வசப்படுத்த நாமல் புதிய திட்டம்

Share

மக்களை தம்வசப்படுத்த நாமல் புதிய திட்டம்

அனைத்து கிராம சேவகர் பிரிவுகளிலும் உள்ள கிராம தலைவர்களை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சந்திக்கவுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தசபல சேனா வேலைத்திட்டத்தின் கீழ் அவர் இந்த நடவடிக்கை எடுத்துள்ளார். மாநகர சபைகள், பிரதேச சபைகள் மற்றும் கிராம மட்டங்களின் தலைவர்கள் அனைவரும் இங்கு கூடுவார்கள் என நாமல் ராஜபக்ஷ கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காக இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

கொழும்பு மாவட்டத்தை மையமாக வைத்து நேற்று மொரட்டுவையில் இருந்து இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதென என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் எந்தவொரு தேர்தலுக்கும் கட்சியை தயார்படுத்துவதும், அடிமட்டத்தில் கட்சியை பலப்படுத்துவதுமே இங்கு நோக்கமாகும் என நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

இதுதவிர பொதுஜன பெரமுன மீது சுமத்தப்பட்டுள்ள பொய்யான குற்றச்சாட்டுகள் மற்றும் உண்மை என்ன என்பது குறித்து கிராம தலைவர்களுக்கு விளக்கமளிக்க தயார் எனவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

மேலும், ஒரு கிராம சேவகர் பிரிவில் இருந்து 10 செயற்பாட்டாளர்கள் தெரிவு செய்யப்பட்டு கட்சியின் பொய்யான அறிக்கைகளுக்கு பதிலளிக்க தயார் எனவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
4 1
அரசியல்இலங்கைசெய்திகள்

உங்களது ஆட்சிக்காலத்திலேயே காணிகளை விடுவியுங்கள்: ஜனாதிபதியிடம் நாகதீப விகாராதிபதி நேரில் வலியுறுத்தல்!

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தனியார் காணிகளை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர...

25 68ed5a882ec6d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சித்திரவதை செய்த பொலிஸ் பரிசோதகருக்கு 7 ஆண்டுகள் சிறை: மொனராகலை மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

நபர் ஒருவரைத் தாக்கி காயப்படுத்தியமை மற்றும் கொடூரமாகச் சித்திரவதை செய்த குற்றத்திற்காகப் பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு...

645574 4228922 updates
உலகம்செய்திகள்

அண்டார்டிகா பனிக்கடியில் ஒளிந்திருக்கும் மர்ம உலகம்: அதிநவீன செயற்கைக்கோள் மூலம் புதிய வரைபடம் வெளியீடு!

அண்டார்டிகாவை மூடியுள்ள பல்லாயிரக்கணக்கான அடி ஆழமான பனிப்படலத்திற்குக் கீழே மறைந்திருக்கும் நிலப்பரப்பு குறித்து சர்வதேச விஞ்ஞானிகள்...

articles2FFE3TpF1W8KlSV5Uh5Ngm
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் தண்டவாளத்தில் ரயில்கள்: திருகோணமலை, மட்டக்களப்பு இரவு நேர சேவைகள் ஜனவரி 20 முதல் ஆரம்பம்!

திட்வா (Titwa) புயல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வரையான இரவு...