2 41
இலங்கைசெய்திகள்

மகிந்தவின் விருப்பமின்றி களமிறக்கப்பட்ட நாமல்: நாடாளுமன்ற உறுப்பினர் வெளிப்படை

Share

மகிந்தவின் விருப்பமின்றி களமிறக்கப்பட்ட நாமல்: நாடாளுமன்ற உறுப்பினர் வெளிப்படை

மகிந்த ராஜபக்ச, மனப்பூர்வமாக நாமல் ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே (Mahindananda Aluthgamage) தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தங்களை அனுப்பி ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) வாக்களிக்க கூறியவரும் மகிந்த ராஜபச்சவே என்றும் மகிந்தானந்த சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், “ராஜபக்ச குடும்பத்தில் உள்ள அனைவரும் இணைந்து தான் ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிக்க கூறினார்கள்.

நாமலுக்கு இது சரியான நேரமல்ல என மகிந்த ராஜபக்ச தெளிவாக தெரிவித்திருந்தார், என்றாலும் நாமலின் கடும் கோரிக்கை காரணமாக வேட்பாளராக களமிறக்க தீர்மானம் எடுக்கப்பட்டது.

இன்றும் மகிந்த ராஜபக்ச அவரது மனசாட்சிக்கு உட்பட்டு ரணில் விக்ரமசிங்க போட்டியிட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இருக்கிறார்” என தெரிவித்துள்ளார்.

 

Share
தொடர்புடையது
Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 76
செய்திகள்உலகம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பான பின்னணி!

ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான்...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...

Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...