18 16
இலங்கைசெய்திகள்

கர்தினாலை சந்தித்து உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து பேசிய நாமல்

Share

கர்தினாலை சந்தித்து உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து பேசிய நாமல்

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச,பேராயர் மல்கம் ரஞ்சித்தை நேற்று (19) பொரளையில் உள்ள பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்கு காரணமானவர்களை விசாரிக்க சுயாதீன ஆணைக்குழுவின் அவசியத்தை பேராயர் வலியுறுத்தினார்.

இந்தநிலையில் குறித்த நோக்கத்திற்காக ஒரு சுயாதீன நீதித்துறை ஆணையத்தை நிறுவுவதன் முக்கியத்துவத்தை ராஜபக்ச ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கு முன்னர் கர்தினால் மல்கம் ரஞ்சித்தை ஜனாதிபதி வேட்பாளர்களான சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார திசாநாயக்க ஆகியோரும் சந்தித்து கலந்துரையாடினர்.

எனினும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அல்லது அவர் தரப்பில் எவரும் இன்று கர்தினாலை சந்திக்கவில்லை.

Share
தொடர்புடையது
13 11
உலகம்செய்திகள்

போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு பின்னர் காஷ்மீரில் தாக்குதல்.. பாகிஸ்தான் மறுப்பு தெரிவிப்பு

இந்தியாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியதாக இந்தியா கூறியதை பாகிஸ்தான் அரசாங்கத்தின் உயர் அதிகாரி...

15 11
இலங்கைசெய்திகள்

வாக்களிப்பதைத் தவிர்த்து கொழும்பில் தங்கியிருந்த 10 லட்சம் வாக்காளர்கள்

கடந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலின் போது வேறுபிரதேசங்களைச் சேர்ந்த சுமார் பத்து லட்சம் வாக்காளர்கள், வாக்களிப்பதைத்...

16 11
இலங்கைசெய்திகள்

இலங்கையை உலுக்கிய பயங்கர விபத்து – பலி எண்ணிக்கை 21ஆக அதிகரிப்பு

றம்பொட பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ளதாக போக்குவரத்து பிரதியமைச்சர் ஊடகம்...

14 11
இலங்கைசெய்திகள்

மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் மின்சார சபையின் அறிவிப்பு

மின்சார கட்டணங்களை உயர்த்துவதற்கான முன்மொழிவை இலங்கை மின்சார சபை அடுத்த வாரம் பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம்...