rtjy 227 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

மகிந்தவை மகிழ்ச்சிப்படுத்த நாமலின் நடவடிக்கை

Share

மகிந்தவை மகிழ்ச்சிப்படுத்த நாமலின் நடவடிக்கை

மாலைதீவு சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தொலைபேசி ஊடாக உரையாடியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மாலைதீவு ஜனாதிபதியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக மாலைத்தீவுக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்தடைந்த ஜனாதிபதி ரணில், முன்னாள் ஜனாதிபதி மகிந்தவுக்கு தொலைபேசி மூலம் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

வாழ்த்துகள் முடிந்ததும் நாமல் ராஜபக்சவிடமிருந்து ஜனாதிபதிக்கு மீண்டும் ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.

இதன்போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு சர்ப்ரைஸ் விருந்து ஒன்றை தயார் செய்துள்ளதாகவும் அதில் பங்கேற்க முடிந்தால் தந்தை மகிழ்ச்சி அடைவார் என நாமல் தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த ஜனாதிபதி ரணில், தனது பாதையை மாற்றிக்கொண்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் விஜேராம இல்லத்திற்கு சென்றுள்ளார்.

ஜனாதிபதி ரணில் வீட்டுக்குச் சென்ற போது, ​​முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பசில் ராஜபக்ச மற்றும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் குழுவினரும் அங்கு கூடியிருந்தனர்.

அவர்கள் அனைவருடனும் பிறந்தநாள் வாழ்த்துக்களில் கலந்து கொண்ட ரணில், மாலைதீவில் இருந்து வெளிநாட்டவர் ஒருவர் நிகழ்வுக்கு வந்திருப்பதாகக் கூறி அங்கிருந்து சிறிது நேரத்திலேயே வெளியேறியுள்ளார்.

Share
தொடர்புடையது
articles2FVIVe6pP2puuipbGIu7f9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாவலப்பிட்டி பிரதேச செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: மின்னஞ்சலால் பரவிய பதற்றம் – தேடுதல் வேட்டை!

நாவலப்பிட்டி, பஸ்பாகே கோரள பிரதேச செயலகத்தின் களஞ்சிய அறையில் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்ட...

lXCde1e0G7ygeggbmYlO4CSM1NM
இலங்கைசெய்திகள்

பண்டிகைக் காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளுக்கு ஜாக்பாட்: ஒரே நாளில் 62 மில்லியன் ரூபாய் வருமானம்!

நத்தார் பண்டிகை மற்றும் தற்போது நடைபெற்று வரும் பாடசாலை விடுமுறைக்காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளின் சுங்க வரி...

MediaFile 1 7
செய்திகள்அரசியல்இலங்கை

டித்வா புயல் பாதிப்பு: விவசாய மற்றும் மீனவ ஓய்வூதியம் பெறுவதற்கான கால எல்லை நீடிப்பு!

‘டித்வா’ (Titli) புயல் மற்றும் நிலவும் அனர்த்த நிலைமை காரணமாக, விவசாய மற்றும் மீனவ ஓய்வூதியதாரர்கள்...

Nalinda Jayathissa
செய்திகள்அரசியல்இலங்கை

நிபந்தனைகளை மீறினால் அலைவரிசைகளின் அனுமதிப்பத்திரம் ரத்து: அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ எச்சரிக்கை!

தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திர நிபந்தனைகள் மீறப்படும் பட்சத்தில், அவற்றை மீளப்பெறும் அதிகாரம் பாடத்திற்கு பொறுப்பான...