11 14
இலங்கைசெய்திகள்

எதிர்கட்சித் தலைமைத்துவத்தில் தலையிடும் நாமல்.. சுட்டிக்காட்டும் ஆளும் தரப்பு!

Share

எதிர்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச இருந்தாலும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவே எதிர்கட்சித் தலைமைத்துவத்தில் அதிகம் தலையிடுவதாக விவசாய அமைச்சர் லால்காந்த தெரிவித்துள்ளார்.

கண்டி மாவட்ட செயலகம் ஏற்பாடு செய்திருந்த விழா ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கொண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“இந்த நாட்டின் அரசியல் கலாச்சாரத்தின்படி, எதிர்க்கட்சி, ஆட்சியை ஆதரிப்பதில்லை. அரசாங்கம் தோல்வியடைந்துவிட்டதாக ஒரு கருத்தை உருவாக்கி ஆட்சியை கைப்பற்ற அவர்கள் விரும்புகின்றார்கள்.

இந்த நாட்டில் சரியான எதிர்க்கட்சி இல்லை என்பது எங்கள் வருத்தம். முடிந்தால் அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்று சேர வேண்டும் என நான் சவால் விடுகின்றேன்.

சஜித் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தாலும், சமூகம் அவரை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக்கொள்ளவில்லை.

நாமல் ராஜபக்சவின் கடந்த கால செயற்பாடுகள் காரணமாக அவராலும் எதிர்கட்சித் தலைமையை பெற முடியவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...