9 19
இலங்கைசெய்திகள்

கனடாவின் தமிழினப் படுகொலை நினைவுச்சின்னம் குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ள நாமல்

Share

கனடாவில்(Canada) தமிழினப் படுகொலை நினைவுச்சின்னம் திறக்கப்பட்டமை தொடர்பில் இலங்கை அரசாங்கம், உடனடியாக இராஜதந்திர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நடவடிக்கையை கடுமையாகக் கண்டித்துள்ள நாமல் ராஜபக்ச, இலங்கை அரசாங்கம் உடனடியாக கனேடிய உயர் ஸ்தானிகரை அழைத்து, முறையாக எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும்.

மேலும். இந்த நினைவுச்சின்னம் திறக்கப்பட்டதன் பின்னணியில் உள்ள அரசியல் நோக்கங்கள் குறித்து நாமல் ராஜபக்ச தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டங்களில் இலங்கையின் இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக எந்த இனப்படுகொலையும் நிரூபிக்கப்படவில்லை அல்லது நிரூபிக்கப்பட முடியாது.

எனினும், இலங்கை இராணுவத்திற்கு எதிராக தவறான இனப்படுகொலை கதையை, கனடா ஊக்குவிப்பதாக, அவர் விமர்சனம் வெளியிட்டுள்ளார்.

அரசியல் காரணங்களுக்காக வரலாற்றுக் கதையை திரித்து, சிதைக்க நீண்ட காலமாக முயன்று வரும், தமிழ் புலம்பெயர் சமூகத்தினரிடையே உள்ள சில பிரிவுகளால், கனேடிய அரசாங்கத்தின் மீது, செல்வாக்கு செலுத்தப்படுவதாகவும் நாமல் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதுபோன்ற நடவடிக்கைகள் இலங்கைக்குள் நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமைக்கான தொடர்ச்சியான முயற்சிகளைத் தடுக்கக்கூடும் என்று நாமல் ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Share
தொடர்புடையது
26 695b58a150149
செய்திகள்அரசியல்இலங்கை

அரசாங்கத்தின் முயற்சிகள் தோல்வியில் முடிகின்றன: தற்போதைய ஆட்சி குறித்து மகிந்த ராஜபக்ச சாடல்!

தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் பல விடயங்களில் முயற்சி செய்தாலும், அவை அனைத்தும் தோல்வியிலேயே...

26 695b5ca406bfd
செய்திகள்இலங்கை

விவசாய அமைச்சுக் கட்டிட விவகாரம்: லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ரிஷாட் பதியுதீன் முன்னிலை!

ராஜகிரியவில் விவசாய அமைச்சிற்காகக் கட்டிடம் ஒன்றை வாடகை அடிப்படையில் பெற்றுக்கொண்டமை தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்காக,...

26 695b3fa4f317d
செய்திகள்இலங்கை

EPF செலுத்தாத நிறுவனங்களுக்கு கடும் எச்சரிக்கை: 3,498 கோடி ரூபாய் நிலுவையை வசூலிக்க அரசு அதிரடி!

இலங்கையில் ஊழியர் சேமலாப நிதி (EPF) பங்களிப்புகளைச் சரியாகச் செலுத்தாத நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாகத்...

26 695b472ef2261
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கனடாவிலிருந்து யாழ்ப்பாணம் வந்த புலம்பெயர் தமிழர் நிமோனியாவால் உயிரிழப்பு: சோகத்தில் வட்டுக்கோட்டை!

கனடாவிலிருந்து விடுமுறைக்காகத் தனது சொந்த ஊரான யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த 42 வயதுடைய நபர் ஒருவர்,...