9 19
இலங்கைசெய்திகள்

கனடாவின் தமிழினப் படுகொலை நினைவுச்சின்னம் குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ள நாமல்

Share

கனடாவில்(Canada) தமிழினப் படுகொலை நினைவுச்சின்னம் திறக்கப்பட்டமை தொடர்பில் இலங்கை அரசாங்கம், உடனடியாக இராஜதந்திர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நடவடிக்கையை கடுமையாகக் கண்டித்துள்ள நாமல் ராஜபக்ச, இலங்கை அரசாங்கம் உடனடியாக கனேடிய உயர் ஸ்தானிகரை அழைத்து, முறையாக எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும்.

மேலும். இந்த நினைவுச்சின்னம் திறக்கப்பட்டதன் பின்னணியில் உள்ள அரசியல் நோக்கங்கள் குறித்து நாமல் ராஜபக்ச தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டங்களில் இலங்கையின் இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக எந்த இனப்படுகொலையும் நிரூபிக்கப்படவில்லை அல்லது நிரூபிக்கப்பட முடியாது.

எனினும், இலங்கை இராணுவத்திற்கு எதிராக தவறான இனப்படுகொலை கதையை, கனடா ஊக்குவிப்பதாக, அவர் விமர்சனம் வெளியிட்டுள்ளார்.

அரசியல் காரணங்களுக்காக வரலாற்றுக் கதையை திரித்து, சிதைக்க நீண்ட காலமாக முயன்று வரும், தமிழ் புலம்பெயர் சமூகத்தினரிடையே உள்ள சில பிரிவுகளால், கனேடிய அரசாங்கத்தின் மீது, செல்வாக்கு செலுத்தப்படுவதாகவும் நாமல் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதுபோன்ற நடவடிக்கைகள் இலங்கைக்குள் நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமைக்கான தொடர்ச்சியான முயற்சிகளைத் தடுக்கக்கூடும் என்று நாமல் ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...