13 40
இலங்கைசெய்திகள்

யோஷிதவை தொடர்ந்து நாமலும் கைது: கசிந்தது அநுர அரசின் உள்ளக தகவல்

Share

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை கைது செய்வதற்காக அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஊடகச் செயலாளரும் சட்டத்தரணியுமான மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் மகன் யோஷித இன்று (27) பிணையில் விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

2029 ஆம் ஆண்டுக்குள் நாமல் ராஜபக்ச இந்த நாட்டின் ஜனாதிபதியாகிவிடுவார் என்ற பெரிய அச்சம் தற்போதைய அரசாங்கத்திற்கு உருவாகியுள்ளதாகவும் மனோஜ் கமகே குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறனதொரு பின்னணியில், ராஜபக்சக்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவார்கள் என்ற நியாயமான பயம் இருப்பதிலிருந்து ஜனாதிபதி ராஜபக்சவும் அவரது குடும்பத்தினரும் குறிவைக்கப்படுகிறார்கள் என்பது தெளிவாகிறதாக சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், மக்களுக்கான தேவைகளை மறந்து விட்டு, அரசாங்கம் தொடர்ந்தும் அரசியல் பழிவாங்கல்களையே மேற்கொண்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அத்தோடு, அரசாங்கம், சிறிலங்கா பொதுஜன பெரமுனவை பாரிய சவாலாக எடுத்துக் கொண்டு இவ்வாறான அரசியல் பழிவாங்கல்களை மேற்கொண்டு வருவதாகவும் தாங்கள் குற்றம் இழைத்திருந்தால் அதனை நீருபித்து காட்டுமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 63
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடு முழுவதும் 28,000-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை: 763 பேர் கைது எனப் பொலிஸார் அறிவிப்பு!

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் நேற்று (09) முன்னெடுக்கப்பட்ட...

world 62
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்டாவில் 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான தரமற்ற அழகுசாதனப் பொருட்கள் பறிமுதல்!

கொழும்பு, பெட்டா பகுதியில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு, எவ்வித லேபிள்களும் இன்றி வைக்கப்பட்டிருந்த சுமார் 10...

world 61
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சர்ச்சைக்குரிய மருத்துவ நியமன நடைமுறை: மே 8 ஆம் திகதி நீதிமன்றம் உத்தரவு!

சர்ச்சைக்குரிய உள்ளகப் பயிற்சிக்குப் பிந்தைய மருத்துவ நியமன நடைமுறைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணைக்கு...

world 60
செய்திகள்இலங்கை

புத்தாண்டு தினங்களில் நாடு முழுவதும் மதுபான விற்பனை நிலையங்கள் மூடல்.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில்...