24 6607c92b9a804
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலத்திற்கு வந்த ராஜபக்சர்களின் உள்ளக மோதல்

Share

அம்பலத்திற்கு வந்த ராஜபக்சர்களின் உள்ளக மோதல்

பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியை நாமல் ராஜபக்சவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான கூட்டம் கட்சியின் தலைமையகத்திலோ அல்லது வேறு எந்த பொது இடத்திலோ நடைபெறாமல் மகிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்திலேயே இடம்பெற்றுள்ளது.

அங்கு இடம்பெற்றமைக்கான காரணம் குறித்த உண்மைகள் வெளியாகியுள்ளதாக தென்னிலங்கை அரசியல்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பசில் ராஜபக்ச அமெரிக்காவில் இருந்து இலங்கைக்கு வந்த பின்னர், நாமல் ராஜபக்சவுடன் மோதல் உச்சகட்டத்தை எட்டியதால், மகிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அழைத்து வரப்பட்டு புதிய பதவிகள் வழங்கப்பட்டன.

எனினும் தேசிய அமைப்பாளர் பதவிக்கு பசில் ராஜபக்சவை நியமிக்க வேண்டும் என ராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் உள்ளிட்ட குழுவினர் கடுமையாக வலியுறுத்தியதாக தெரியவந்துள்ளது.

எனினும் தற்போதுள்ள சூழ்நிலைக்கு ஏற்றவாறு பசில் ராஜபக்ஷ அதனை நிராகரித்துள்ளார். கட்சியின் ஒழுக்காற்று குழு மற்றும் மோதலைத் தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவினால் அவரது அதிகாரம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பசில் ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் வரை அனைவரையும் வெற்றி கொள்வதற்காக பத்து பல சேனா என்ற பிரச்சார திட்டத்தின் கீழ் நாமல் ராஜபக்ச புதிய நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Share
தொடர்புடையது
GettyImages 1202240221
செய்திகள்உலகம்

மார்ச் 20-ல் வெளியாகிறது புதிய BTS அல்பம் – உலகச் சுற்றுப்பயணத்திற்கும் தயார்!

உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ள தென் கொரியாவின் புகழ்பெற்ற கே-பாப் (K-pop) இசைக் குழுவான BTS,...

44520176 vijay33
செய்திகள்இந்தியா

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: த.வெ.க. தலைவர் விஜய்க்கு சி.பி.ஐ. அழைப்பாணை – ஜனவரி 12-ல் விசாரணை!

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) பிரசாரத்தின் போது...

gold 5
செய்திகள்இலங்கை

தொடர்ந்து உயரும் தங்கம்: இன்றும் பவுணுக்கு 3,000 ரூபாய் அதிகரிப்பு – புதிய விலைப் பட்டியல் இதோ!

இலங்கையில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகத் தொடர்ச்சியான ஏற்றத்தைக் கண்டு வருகின்றது. நேற்று (05)...

1739116331 energy min
இலங்கைஏனையவைசெய்திகள்

மூன்று ஆண்டுகளில் 30% கட்டணக் குறைப்பு: நாடாளுமன்றத்தில் அமைச்சர் குமார ஜயகொடி உறுதி!

வாக்குறுதியளித்தபடி மூன்று ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணத்தை மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கும் இலக்கை நோக்கி அரசாங்கம்...