24 6607c92b9a804
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலத்திற்கு வந்த ராஜபக்சர்களின் உள்ளக மோதல்

Share

அம்பலத்திற்கு வந்த ராஜபக்சர்களின் உள்ளக மோதல்

பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியை நாமல் ராஜபக்சவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான கூட்டம் கட்சியின் தலைமையகத்திலோ அல்லது வேறு எந்த பொது இடத்திலோ நடைபெறாமல் மகிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்திலேயே இடம்பெற்றுள்ளது.

அங்கு இடம்பெற்றமைக்கான காரணம் குறித்த உண்மைகள் வெளியாகியுள்ளதாக தென்னிலங்கை அரசியல்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பசில் ராஜபக்ச அமெரிக்காவில் இருந்து இலங்கைக்கு வந்த பின்னர், நாமல் ராஜபக்சவுடன் மோதல் உச்சகட்டத்தை எட்டியதால், மகிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அழைத்து வரப்பட்டு புதிய பதவிகள் வழங்கப்பட்டன.

எனினும் தேசிய அமைப்பாளர் பதவிக்கு பசில் ராஜபக்சவை நியமிக்க வேண்டும் என ராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் உள்ளிட்ட குழுவினர் கடுமையாக வலியுறுத்தியதாக தெரியவந்துள்ளது.

எனினும் தற்போதுள்ள சூழ்நிலைக்கு ஏற்றவாறு பசில் ராஜபக்ஷ அதனை நிராகரித்துள்ளார். கட்சியின் ஒழுக்காற்று குழு மற்றும் மோதலைத் தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவினால் அவரது அதிகாரம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பசில் ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் வரை அனைவரையும் வெற்றி கொள்வதற்காக பத்து பல சேனா என்ற பிரச்சார திட்டத்தின் கீழ் நாமல் ராஜபக்ச புதிய நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Share
தொடர்புடையது
44522559 ravann
செய்திகள்உலகம்

மதுரோ பாணி கைது புதினுக்குப் பொருந்தாது: உக்ரைன் ஜனாதிபதியின் எதிர்பார்ப்பும் ட்ரம்பின் நேரடிப் பதிலும்!

வெனிசுவேலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதே போன்றதொரு...

images 4 3
செய்திகள்அரசியல்இலங்கை

டக்ளஸ் தேவானந்தா ஒரு சர்வதேசக் குற்றவாளி; கைதை வெறும் கண்துடைப்பாக மாற்ற வேண்டாம் – சட்டத்தரணி சுகாஸ் கடும் சாடல்!

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெறும் ஆயுத மோசடியாளர் மட்டுமல்ல, அவர் தமிழர்களுக்கு எதிரான பல...

black flag
செய்திகள்இலங்கை

பெப்ரவரி 04 தமிழர்களின் கரிநாள்: கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பில் பாரிய பேரணிக்கு அழைப்பு!

இலங்கையின் சுதந்திர தினமான எதிர்வரும் பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதியை, தமிழர் தேசத்தின் “கரிநாளாக”...

External Affairs Minister S Jaishankar calls on Sri Lankan President Anura Kumara Dissanayake in Colombo on Tuesday. ANI
செய்திகள்இலங்கை

இலங்கை அரசியலில் இராஜதந்திரப் போர்: இந்தியாவின் $450 மில்லியன் நிதியுதவியும், சீனாவின் அடுத்தகட்ட நகர்வும்!

இலங்கைக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட இந்திய மற்றும் சீன உயர்மட்டத் தூதுவர்களின் சந்திப்புகள் குறித்து இதுவரை...