24 6607c92b9a804
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலத்திற்கு வந்த ராஜபக்சர்களின் உள்ளக மோதல்

Share

அம்பலத்திற்கு வந்த ராஜபக்சர்களின் உள்ளக மோதல்

பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியை நாமல் ராஜபக்சவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான கூட்டம் கட்சியின் தலைமையகத்திலோ அல்லது வேறு எந்த பொது இடத்திலோ நடைபெறாமல் மகிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்திலேயே இடம்பெற்றுள்ளது.

அங்கு இடம்பெற்றமைக்கான காரணம் குறித்த உண்மைகள் வெளியாகியுள்ளதாக தென்னிலங்கை அரசியல்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பசில் ராஜபக்ச அமெரிக்காவில் இருந்து இலங்கைக்கு வந்த பின்னர், நாமல் ராஜபக்சவுடன் மோதல் உச்சகட்டத்தை எட்டியதால், மகிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அழைத்து வரப்பட்டு புதிய பதவிகள் வழங்கப்பட்டன.

எனினும் தேசிய அமைப்பாளர் பதவிக்கு பசில் ராஜபக்சவை நியமிக்க வேண்டும் என ராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் உள்ளிட்ட குழுவினர் கடுமையாக வலியுறுத்தியதாக தெரியவந்துள்ளது.

எனினும் தற்போதுள்ள சூழ்நிலைக்கு ஏற்றவாறு பசில் ராஜபக்ஷ அதனை நிராகரித்துள்ளார். கட்சியின் ஒழுக்காற்று குழு மற்றும் மோதலைத் தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவினால் அவரது அதிகாரம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பசில் ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் வரை அனைவரையும் வெற்றி கொள்வதற்காக பத்து பல சேனா என்ற பிரச்சார திட்டத்தின் கீழ் நாமல் ராஜபக்ச புதிய நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 6 2
செய்திகள்உலகம்

பிரித்தானியாவில் புதிய சகாப்தம்: கடவுச்சீட்டு சோதனை இல்லை, நீண்ட வரிசை இல்லை! – AI மூலம் விமான நிலையங்களில் முக ஸ்கேன் அனுமதி!

பிரித்தானியா, தனது விமான நிலையம் ஒன்றில், நவீன தொழில்நுட்பம் மூலம் கடவுச்சீட்டு சோதனை இல்லாமலே பயணிகளை...

skynews donald trump benjamin netanyahu 7080062
செய்திகள்உலகம்

ஊழல் வழக்கில் நெதன்யாகுவை மன்னிக்க வேண்டும்: ட்ரம்ப் கடிதத்துக்கு இஸ்ரேல் ஜனாதிபதி அலுவலகம் மறுப்பு!

ஊழல் வழக்குகளில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை (Benjamin Netanyahu) மன்னிக்குமாறு அந்நாட்டு ஜனாதிபதி ஐசக்...

articles2FgwJ5r85aOgQuM4EhGVg6
அரசியல்இலங்கைசெய்திகள்

நுகேகொடைப் பேரணி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நினைவூட்டவே: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அழுத்தம் கொடுப்போம் – நாமல் ராஜபக்ச!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவிருக்கும் அரசாங்கத்திற்கு எதிரான பொதுப் பேரணி, அரசாங்கம் மக்களுக்கு...

25 6915d20fc755f
செய்திகள்அரசியல்இலங்கை

வென்றெடுக்கப்பட்ட அதிகாரம் பொதுமக்களுக்காக மட்டுமே; சட்டத்தின் முன் அனைவரும் சமமே”: கார்த்திகை வீரர்கள் தினத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க!

வென்றெடுக்கப்பட்ட அதிகாரம் பொதுமக்களுக்காக மாத்திரமே என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று நடைபெற்ற கார்த்திகை வீரர்கள்...